காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவியும் இக்கல்லூரியின் முன்னைநாள் விஞ்ஞான ஆசிரியையுமாகிய திருமதி ரஞ்சனாதேவி பேரின்பநாதன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளது.
திருமதி ரஞ்சனாதேவி எமது கல்லூரியில் கற்றுவந்த காலத்தில் அவரிடத்தில் காணப்பட்ட அமைதி, அடக்கம், பணிவு என்பவற்றுடன் கல்வியில் அவர்காட்டிய ஈடுபாடும் காரணமாக இவரது ஆசிரியர்களிடத்தில் நன்மதிப்பினைப் பெற்றவராக விளங்கினார். கல்வியில் சிறந்து விளங்கிய இவர் மாணவ முதல்வராகவும் பணியாற்றி ஆளுமை மிக்கவர் என்பதை நிரூபித்தவர்.
தான் கற்ற பாடசாலையிலேயே விஞ்ஞான ஆசிரியையாக பதவியேற்றுக்கொண்டு இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு விஞ்ஞான பாடத்தினை சிறப்புற போதித்து கற்பித்தல் திறன் மிக்க ஆசிரியை என்ற பெயரினைப் பெற்றவர். இவரைப் போன்றே பழைய மாணவர்களான இவரது சகோதரங்களும் கல்வியில் சிறந்து விளங்கி உயர் பதவிகளை வகித்து கல்லூரியின் புகழை விளங்கவைத்து வருகின்றனர் என்பது இத்தருணத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.
அன்னாரது இழப்பினால் பெரும் துயருற்றிருக்கும் அன்னாரது ஆருயிர்க் கணவர், பாசமிகு பிள்ளைகள், அன்புமிக்க உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.
காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் -கனடா
முழுமையான கண்ணீர் அஞ்சலிப் பிரசுரத்தினைக் கீழே காணலாம்.
No Responses to “எமது கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியை திருமதி.ரஞ்சனாதேவி பேரின்பநாதன் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி”