பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முன்னைநாள் நிர்வாக சபை உறுப்பினரும் கல்லூரியின் விளையாட்டுத்துறைச் சாதனையாளருமாகிய அமரர் நாகராஜா பாலசுப்பிரமணியம் அவர்களது நினைவாக கல்லூரி விளையாட்டுப் போட்டியின் முன்னோடி நிகழ்வாக இடம்பெற்று வருகின்ற வீதியோட்டத்தின் வெற்றியாளருக்கு வழங்குவதற்கான சுற்றுக் கேடயம் அன்னாரது நண்பர்களினால் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையிடம் அண்மையில் பாலசுப்பிரமணியத்தின் 31வது நாள் நினைவு நிகழ்வின்போது ஒப்படைக்கப்ட்டிருந்தது.
இக்கேடயம் பாடசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அண்மையில் நடைபெற்ற நல்லாhசிரியர் அரவிந்தன் மற்றும் சாதனை மாணவர்கள் ஆகியோரது பாராட்டு நிகழ்வின் அரங்கில் வைத்து ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் சார்பில் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மாணிக்கம் கனகசபாபதியிடமிருந்து இக்கேடயத்தினைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்போது எடுக்கப்பட்ட படத்தினை கீழே பார்வையிடலாம்:
No Responses to “அமரர் நாகராஜா பாலசுப்பிரமணியம் நினைவு சுற்றுக் கேடயம் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் பாடசாலையிடம் கையளிக்கப்பட்டது.”