கணிதம், விஞ்ஞானம, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆறாம் தரம் தொடக்கம் பதின்மூன்றாம் தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுடைய மேற்குறித்த துறைகள் சார்ந்த செய்முறை அறிவினை மேம்படுத்தும் நோக்குடன் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும் என கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகங்களை அறிவுறுத்தியிருந்தது.
இதற்கமைய இக்கண்காட்சி காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்லூரி அதிபர் திருமதி சிவாந்தினி வாகீசன் அவர்களின் நெறிப்படுத்தலுடனும் இத்துறை சார்ந்த ஆசிரியர்களினதும் வலயக் கல்வி அலுவலர்களினதும் முழுமையான ஒத்துழைப்புடனும் வெகு சிறப்பாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
சென்ற 17-10-2017 செவ்வாய்க்கிழமை கல்லூரியின் கணித விஞ்ஞான ஆய்வுகூடத்தில் காலை 9.00மணிக்கு அதிபர் திருமதி சிவாந்தினி வாகீசன் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்த இக்கண்காட்சி நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியையும் ஊட்டப்பாடசாலையான வலந்தலை வடக்கு அ.மி.த.க.(சடையாளிப் பள்ளிக்கூடம்)பாடசாலையின் அதிபருமாகிய செல்வி விமலாதேவி விஸ்வநாதன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
கல்லூரி மாணவர்களின் மேற்குறித்த துறைகள் சார்ந்த செய்முறைத் திறமையினை வெளிக்கொணர்ந்ததுடன் அவர்களின் செய்முறை அறிவினையும் மேம்படுத்த உதவிய இக்கண்காட்சியை அயற் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு பயன்பெற்றனர்.
இக்கண்காட்சி நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்களை கீழே பார்வையிடலாம்:
No Responses to “காரை இந்துவின் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்த மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்த கண்காட்சி.”