பாடசாலைச் சமூகமும் புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவினை மிகுந்த உற்சாகத்துடனும் உணர்வோடும் கொண்டாடி கல்லூரி அன்னையை பெருமைப்படுத்தி வருவதுடன் இக்கொண்டாட்டங்கள் ஊடாக கல்லூரியின் மேம்பாட்டிற்கு தமது பங்களிப்பினையும் செய்து வருகின்றனர்.
மேற்குறித்த விழாவினையொட்டி சுவிற்சலாந்தில் வாழும் காரைநகர் மக்களின் அமைப்பான சுவிஸ் காரை அபிவிருத்தி சபை ஒரு லட்சம் ரூபா நிதியுதவியினை காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக கல்லூரி அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் அவர்களிடம் கையளித்திருந்தது.
அண்மையில் நடைபெற்று நிறைவடைந்த கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் 125 ஆவது ஆண்டு விழா நிகழ்வுகளுக்கு தலைமை வகித்து உரையாற்றிய கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் கல்லூரிச் சமூகம் வழங்கிய ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி தெரிவிக்கும்போது நிதியுதவி வழங்கிய சுவிஸ் காரை அபிவிருத்தி சபைக்கும் கல்லூரி சார்பாக தமது நன்றியைத் தெரிவித்திருந்தார்.
No Responses to “கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய 125 ஆவது ஆண்டு விழாவினையொட்டி சுவிஸ் காரை அபிவிருத்தி சபை ஒரு லட்சம் ரூபா நிதியுதவி”