எமது கல்லூரியின் பழைய மாணவரும் தமது அளப்பரிய சேவையினால் தமிழ் மக்கள் அனைவரும் நன்கறிந்த திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்கள் தற்போது லண்டனில் வாழ்ந்து தமது மக்களுக்கான பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். காரைநகர் மக்களுக்கு இயல்பாகவேயுள்ள சமய உணர்வுடன் இன மொழிப் பற்றும் மிகுந்து காணப்படும் இவர் தமிழ்இ சமயம்இ அரசியல் சமூகம் ஆகிய துறைகள் சாரந்து ஆற்றிய -ஆற்றிவருகின்ற அளப்பரிய பணிகள் இவரை ஒப்பற்ற சாதனையாளன் என்கின்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது. திரு.சம்பந்தன் அகவை எண்பதை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு ‘சாதனையாளன் ஐ.தி.சம்பந்தன்’ என்ற தலைப்பிட்டு முத்து விழா மலர் அண்மையில் லண்டனில் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது. இவரால் நிலைநாட்டப்பட்ட பல்வேறு சாதனைப் பணிகளின் பதிவாகவும் தமிழ் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முக்கியமான சமய சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் இவரது சேவை குறித்து பல கோணங்களிலிருந்து ஆய்வுசெய்த கருத்துக்களையும் தகவல்களையும் உள்ளடக்கியதாகவும் மூத்த பத்திரிகையாளர் கலாநிதி பொன்.பாலசுந்தரம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு இம்மலர் வெளிவந்துள்ளது. எமது கல்லூரியின் புகழை நிலைநாட்டி வருவோர் வரிசையில் முன்னணியில் விளங்கும் திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்கள் கனடாவில் பழைய மாணவர் சங்கத்தின் உருவாக்கத்திற்கு உந்துதலாக இருந்து செயற்பட்டதுடன் அதன் வளர்ச்சியிலும் அக்கறையுடன் ஈடுபாடு காட்டி ஊக்குவித்து வருபவர். எமது சங்கத்தினால் வழங்கப்பட்டு முத்து விழா மலரில் இடம்பெற்றுள்ள வாழ்த்துச் செய்தியினை பிரசுரிப்பதில் பெருமையடைகின்றோம். (இச்செய்தி முன்னைய நிர்வாகத்தினால் வழங்கப்பட்டதாகும்)
கீழே உள்ள இணைப்பினை அழுத்துவதன் மூலம் வாழ்த்துச் செய்தியினை பார்வையிடமுடியும்.
Muthu Vizha of I.T.Sampanthan
No Responses to “கல்லூரியின் புகழை நிலைநாட்டிவருகின்ற பழைய மாணவர் ஐ.தி.சம்பந்தன் அவர்களுக்கு முத்து விழா மலர் வெளியிடப்பட்டு மதிப்பளிக்கப்பட்டுள்ளார்”