சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலையிலிருந்து க.பொ.த.(சாதாரணம்) பரீட்சைக்குத் தோற்றி மிகச் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்டவர் செல்வி உஷாந்தினி சோதிநாதன். தற்போது இந்துக் கல்லூரியில் க.பொ.த.(உயர்தரம்) வகுப்பில் வர்த்தகப் பிரிவின் முதலாம் ஆண்டில் பயின்று வரும் உஷாந்தினி தந்தையாரை இழந்துவிட்ட நிலையில் இவரது குடும்பம் வாழ்வாதார வசதிகளற்றுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு திறமை மிக்க மாணவியான உஷாந்தினி இறுதிப் பரீட்சைக்குத் தோற்றும் வரைக்குமான இரண்டு ஆண்டுகளுக்கும் ஏற்படக்கூடிய கற்றல் செயற்பாட்டிற்கான உதவியை வழங்கி உதவ முன்வரவேண்டும் என கல்லூரி அதிபர் பரிந்துரை செய்திருந்தார்.
கனடாவில் வதியும் கல்லூரியின் பழைய மாணவரான திரு.மாணிக்கம் கனகசபாபதி இவ்வுதவியை வழங்க முன்வந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினூடாக இதனை வழங்கியுள்ளார். திரு.மாணிக்கம் கனகசபாபதி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். செல்வி உஷாந்தினி இவ்வுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு கருசனையுடன் செயலாற்றிய பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைக்கும் மாணவியின் குடும்பநிலையைப் புரிந்துகொண்டு உதவிய திரு.கனகசபாபதிக்கும் கல்லூரிச் சமூகத்தின் சார்பில் அதிபர் திருமதி சிவாந்தினி வாகீசன் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
திரு.மாணிக்கம் கனகசபாபதி கல்லூரிக்கு பயணம் செய்தபோது இவ்வுதவியின் முதலாவது தவணைக்கான உதவிக் கொடுப்பனவினை செல்வி உஷாந்தினி சோதிநாதனிடம் கையளித்தபோது எடுக்கப்பட்ட படத்தினை கீழே பார்க்கலாம். அருகில் கல்லூரியின் அதிபரும் தாய்ச் சங்கத்தின் தலைவருமாகிய திருமதி சிவாந்தினி வாகீசன் காணப்படுகின்றார்.
No Responses to “வசதி குறைந்த உயர்தர வகுப்பு மாணவியின் கல்விச் செலவிற்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினூடாக உதவிய உறுப்பினர்”