முன்னாள் போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களின் நீண்ட நாள் முயற்சி கைகூடியுள்ளது
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான விரிவாக்கலுக்காக காரைநகர் பொது மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியான 4.5 பேர்ச் அளவு காணியை அலுவலக முறையில் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு காரைநகர் பொது மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை (14.03.2015) அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.ரவீந்திரன,; வடமாகாண சுகாதார அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் திரு.ஏ.கேதீஸ்வரன், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திரு.இ.தேவநேசன், காரைநகர் பொது மருத்துவமனை மருத்துவ அதிகாரி மருத்துவகலாநிதி.கே.இந்திரமோகன், கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், ஒய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும், பழைய மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் போசகருமான திரு.எஸ்.கே.சதாசிவம், மருத்துவமனைப் பணியாளர்கள், நோயாளர் நலன் புரிச்சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்; ஆகியோரும் கலந்து கொண்டனர்
வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.ரவீந்திரன் அவர்கள் மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியான 4.5 பேர்ச் அளவு காணியை பாடசாலையின் மைதான விரிவாக்கத்திற்காக பயன்படுத்த அலுவலக முறையில் அனுமதி அளித்தார்.
அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தனது உரையில் மாகாண சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இக்காணியானது பாடசாலை வளர்ச்சியின் ஒரு பகுதியான விளையாட்டு மைதான விரிவாக்கலுக்கு பேருதவியாகும் எனத் தெரிவித்தார்
மகளிர் விவகார பிரதி அமைச்சரும் எமது பாடசாலையின் பழைய மாணவியுமாகிய திருமதி.விஐயகலா மகேஸ்வரன் அவர்கள் இக் காணியை கல்லூரிக்கு வழங்குமாறு வடமாகாண ஆளுநர் அலுவலகத்திடம் வேண்டுகோள் விடுத்தமைக்கு அமைவாக இன்று இக்காணி எமது பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
அதிபர் தனது உரையில் பிரதி அமைச்சர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினர், வட மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள் எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து இக் காணியை பெற்றுக் கொள்வதற்கு தன்னாலான பெருமுயற்சி எடுத்த பழைய மாணவர் சங்க முன்னாள் போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம்; அவர்களிற்கும் கல்லூரி சமுகம் சார்பாக தமது நன்றியைத் தெரிவித்தார்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.
முழுமையான படத்தொகுப்பினைக் கீழே காணலாம்.
One Response to “விளையாட்டு மைதான விரிவாக்கலுக்காக மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதி காணி சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது”
April 2, 2015
vernyGreat!