ஐ.தி.சம்பந்தன் சுடரொளி இதழாசிரியர் பிரித்தானியா
கலாநிதி. ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக்கல்லூரி) கல்வித்துறையில் வரலாறு படைத்த கல்லூரி. ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட.து. இப்பாடசாலையின் ஸதாபகர் சயம்பு வாத்தியாருக்கு முதற்கண் நாம் வணக்கம் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். அவர் தீர்க்கதரிசனத்துடன் ஆரம்பித்த இப்பாடசாலை ஆயிரக்கணக்கான காரை மாணவர்களைக் கல்விமான்களாக ஆக்கிய பெருமைக்குரிய கல்லூரி.
ஆங்கிலம் ஆட்சிமொழியாகயிpருந்தபடியால் ஆங்கிலக் கல்வியின் தேவையை உணர்ந்த சயம்பு வாத்தியார் 1888ல் ஆங்கில இந்து பாடசாலையை ஆரம்பித்தார். தூய நோக்கத்தோடு ஆரம்பிகப்பட்ட இப்பாடசாலை விருட்சம் போல் வளர்ச்சியடைந்தது. அன்று மக்களுக்குத் தேவையான ஆங்கிலக் கல்வியை முறையாகப் படிக்க திரு.சயம்பு ஆசிரியர் ஏற்படுத்திய வசதியால் பலர் ஆங்கிலக் கல்வியைக் கற்றுக்கெண்டனர். அன்று அரச உத்தியோகம் பெறவதற்கு ஆங்கில அறிவு வழிவகுத்தது. இலங்கையில் மட்டுமன்றி மலேசியா நாட்டுக்கும் சென்று உயர்பதவிகள் வகுத்து காரைநகருக்குப் பெருமை தேடியவர்கள் பலர்.
இக்கல்லூரி 125 ஆண்டுகாலங்களில் பல பெயர் மாற்றங்களைப் பெற்றிருந்தாலும் சயம்பர் பாடசாலை என்ற பெயர் மக்கள் மனதை விட்டு அகலவில்லை. இப்பாடசாலையின் ஸதாபகர் சயம்பர்; என்பதால் கல்லூhயின் முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் சயம்பர் சிலையை புனரமைப்புச் செய்து பொலிவுறச் செய்யும் பணியை பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிறைவேற்றியுள்ளமை பாராட்டத்தக்கது.
நான் காரைநகர் இந்துக் கல்லூரியில் 9ஆண்டுகள் படித்தவன் என்ற முறையில் எமது காலத்தில் அதிபராகவிருந்த கலாநிதி.ஆ. தியகராசா இக்கல்லூரியின் முன்னேற்றத்திற்கு ஆற்றிய பணி அளப்பரியது. பழைய கட்டிடங்களை உடைத்து புதிய கட்டிடங்களை ஆக்குவதில் தீவிரமாக உழைத்த அதிபர் மாணவர்களைத் தொண்டர்களாகப் பயன்படுத்தி கட்டிடவேலைகளைத் துரிதப்படுத்தியவர். இக்கல்லூரியின் வளர்ச்சியில் அதிபர் தியாகராசா அவர்களுக்கு ஒரு தனிவரலாற உண்டு.
இன்னுமொரு பெருமை காரைநகர் இந்துக்கல்லூரி அதிபராக நியமனம் பெறுவதற்கு முன் கோவளத்தில் ஆச்சிரமம் அமைத்து ஆத்மீகம் வளர்த்த பேப்பர் சுவாமிகளின் ஆசி பெற்றே அதிபர் பதவியை ஏற்றவர். சுவாமிகள் வழங்கிய ஆசியுரை ‘காரைநகர் இந்துக்கல்லூரியை விருட்சம்போல் வளர்த்;தெடு’ அந்த ஆசியை நிறைவேற்றிய பெருமைக்குரிவர் கலாநிதி தியாகராசா அவர்கள்.; காரைநகர் இந்துக்கல்லூரியின் சேவையால் முதற்தரமான கல்லூரி அதிபர் என்ற பெயரையும் பெற்றுக்கொண்டவர்.
நாம் இப்பாடசாலையில் கல்வி கற்றகாலத்தில் படிப்பித்த புகழ்பெற்ற ஆசிரியர்களை நினைவு கூருவது எனது கடைமையாகும். திரு.என்.சபாரத்தினம், திரு.அய்யாத்துரை, திரு. கனகசுந்தரம், திரு.சுப்பிரமணியம், திரு.சிதம்பரப்பிள்ளை, திரு.ஏடின். வைத்திலிங்கம், திரு.வைத்தியநாதன், தீரு. போபாலசாமி, திரு.சீனிவாசம் சாஸ்த்தரி, திரு.ஆர்.கந்தையா, திரு.எஸ.கந்தையா, திரு.ஐயம்பிள்ளை, திரு.திருநீலகண்டசிவம் ஆகிய ஆசிரியர்களிடம் கல்வி கற்கும் வாயப்பக்கிடைத்ததையிட்டுப் பெருமை அடைகிறேன்.
இக்கல்லூரியே என்னை ஒருபேச்சாளனாக, எழுத்தாளனாக, அரசியல்வாதியாக வளர்த்தது. ஆதிபர் திரு. தியாகராசா அவர்கள் 1952ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் இராச்சியக் கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்டார். மாணவர்களாகிய நாங்கள் அவருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டதும் ஒரு நினைவலை.
இக்கல்லூhயின்; 125 வருடகாலத்தில் 25 அதிபர்கள் பணியாற்றியுள்ளனர். அவர்களுள் ஒரு பிரபல எழுத்தாளனனாக, கவிஞனாக, நாடாக ஆசிரியனாக, விமர்சகராக விளங்கிய கலாநிதி காரை சுந்தரம் பிள்ளை காரை நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஊர்பற்றுமிக்க இவர் ஊரின் பெயரைப் பெருமைப்படுத்தி ‘காரை சுந்தரம் பிள்ளை’ என்ற பெயரில் தனது படைப்புக்களை வெளியிட்ட வந்த சிறந்த எழுத்தாளன். அந்தப்பெருமையுடன் கல்லூரி அதிபராகப்பணியாற்றியவர். கல்லூரியின் நிர்வாகத்தையும் திறம்பட நடத்தியவர்.
அன்று காரைநகர்
இந்துக் கல்லூரிக்கு தேவையான மண்டபத்தைக் கட்டி உதவிய திருமதி தங்கம்மா நடராசா அவர்களின் சேவையை நாம் நினைவு கூருவதில் பெருமை அடைகின்றோம் . காரைநகர் களபூமியில் வசித்து வந்த பிரபல நீதியரசராக விளங்கிய கே.சி.நடராசா. கியூ.சி அவர்கள் கொலை வழக்கொன்றில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு மரணதண்டனை தீhப்பு வழங்கிய பின் வீட்டில் சிந்தித்து அதிர்ச்சியினால் மரணமடைந்தார். மனித காருண்ய சிந்தனை கொண்ட நீதியரசர் மறைவு காரைநகருக்கு மட்டுமன்றி நீதி உலகிக்கே பேரிழப்பை ஏற்படுத்தியது. ஆத்மீக சிந்தனை கொண்ட நீதியரசரின் மணைவி திருமதி தங்கம்மா அவர்கள் நீதியரசரின் நினைவாக ‘நடராசா மண்டபத்தை’ கட்டியுதவிய பெருந்தகை. அம் மண்டபம்; கல்லூரியின் உயர்வுக்கு விருடசமாக வளங்குகிறது.
இவர்கள் எல்லோரினதும் உதவியால் உயர்வுபெற்ற இக்கல்லூரியின் 125வது ஆண்டு விழா சிறப்புடன் நடைபெற வாழ்த்துகிறோம். அண்மையில் புதிய அதிபராகப் பதவி ஏற்ற திருமதி வாசுகி தவபாலன் அவர்கள் மேலும் கல்லூரியை உயர்நிலைக்கு கொண்டவர வாழ்த்துகிறோம்
திரு.ஐ.தி.சம்பந்தன்
சுடரொளி இதழாசிரியர்
பிரித்தானியா
No Responses to “காரை மக்களை வாழ வைத்த கல்வி விருட்சம்”