கடந்த ஆகஸ்ட் 2015 இல் நடைபெற்ற க.பொ.த (உ-த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைகழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரம் இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்.
இம்மாணவர்களின் விபரம் வருமாறு:
1.செல்வி. துஸ்யந்தினி அரியபுத்திரன் கலைப்பீடம் யாழ் பல்கலைக்கழகம்
2.செல்வி தர்ஜிகா மூர்த்தி நுண்கலைப்பீடம் (இசைத்துறை) கிழக்குப் பல்கலைக்கழகம்
கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ள இம்மாணவர்களையும் அவர்களுக்கு போதனை அளித்த ஆசிரியர்களையும் பாடசாலை சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பராட்டி வாழ்த்துகின்றது.
No Responses to “காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இரு மாணவர்கள் பல்கலைக் கழக அனுமதி பெற்றுள்ளனர்”