நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் சரித்திர நாயகன் ச.அருணாசல உபாத்தியாயரின் எண்ணத்தில் தோன்றி ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களினால் 1888ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலை என பெயரிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை தகமைசால் அதிபர்கள் நல்லாசான்கள் நாடு நலம்பெற்றிட உழைத்த நலன் விரும்பிகள் அனைவரினதும் நற்பணியால் கல்விப் பயிர் வளர்த்து 125ஆம் ஆண்டினை எட்டி பெருமையுடன் தளர்வின்றி கல்விப்பணி ஆற்றும் கல்லூரியின் வரலாற்றில் முக்கியம் மிக்கது இவ்வாண்டாகும்.
கடந்த ஆண்டில் கனடாவில் வதியும் பழைய மாணவர்களின் உழைப்பின் பயனாக உருவாக்கப்பட்ட பழைய மாணவர் சங்கம் காலத்தின் தேவை கருதி இணையத்தள சேவையினை ஆரம்ப்பிப்பது பாராட்டுக்குரியதாகும்.
உலகம்பூராவும் பரந்து வாழும் காரை இந்துவின் புதல்வர்களை ஒன்றிணைக்கவும் அறிந்துகொள்ளவும் பொது நலனுக்காக ஒன்றுபட்டு உழைக்கவும் karaihinducanada.com இணையத்தளம் சேவையாற்றும் என்பது நம்பிக்கை.
கல்லூரியினதும் கல்வியை நிர்வகிக்கும் நிறுவனங்களின் இலக்குகளை நிறைவேற்ற இணையத்தளம் விதிமுறைகளிற்கு அமைவாக பணியாற்ற வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.
விளக்கில் புத்தகத்தைப் படிக்கலாம். விளக்கில் புத்தகத்தை எரிக்கலாம் எனும் வாக்கியம் இங்கு நோக்கற்பாலது.
To Thine Own Self Be True உனக்கு நீயே உண்மையாய் இரு
என ஷேக்ஸ்பியர் கம்லற்றில் (Shakesperes Hamlet) குறிப்பிட்ட கல்லூரியின் மகுட வாசகத்திற்கு அமைவாக சவால்களிற்கு மத்தியில் வாழும் நம் கிராமத்து மாணவர்களை நாட்டின் நற்குடிமக்களாக உருவாக்க கல்லூரி பயனுறு கல்விப்பணியாற்ற அனைவரும் உண்மையாக உழைக்க வாழ்த்துகின்றேன்.
எஸ்.கே.சதாசிவம்
போசகர்
பழைய மாணவர் சங்கம் காரைநகர்.
No Responses to “தாய்ச் சங்க போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களின் வாழ்த்துச் செய்தி”