காரைநகர் கோட்டத்தில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவி முதன்மைச் சித்தி பெற்று சாதனை
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த.(சாதாரணம்) – 2015 பரீட்சைப் பெறுபேறுகள் அலுவலகப்பற்றற்ற முறையில் வெளிவந்து கொண்டுள்ள நிலையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து இப்பரீட்சைக்கு தோற்றிய செல்வி குலமதி பாலேந்திரா 7A B C என்ற பெறுபேற்றினைப் பெற்று காரைநகர் கல்விக் கோட்டத்தில் முதன்மை மாணவி என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
செல்வி குலமதி பாலேந்திரா சென்ற ஆண்டு நடைபெற்ற பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பொதுத் தகமைத் தேர்ச்சிக்கான விருதினைப் பெற்றுக் கொண்டவர் என்பதுடன் இவ்விருதினை இவருக்கு வழங்குவதற்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிதி அநுசரணை வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
காரைநகர் கோட்டத்தில் முதன்மைப் பெறுபேறு பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவி செல்வி. குலமதி பாலேந்திரா அவர்களையும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பராட்டி வாழ்த்துகின்றது.
No Responses to “காரைநகர் கோட்டத்தில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவி முதன்மைச் சித்தி பெற்று சாதனை”