இடம்: கலாநிதி. ஆ. தி. ம. ம. வித்தியாலயம்.
திகதி;: 26.09.2015ம் திகதி சனிக்கிழமை
நேரம்: பிற்பகல் 3.00மணி இலிருந்து பிற்பகல்பகல் 5.00மணி வரை
இம்முறை போட்டியாளர்களின் பங்குபற்றலை அதிகரிக்கவும், பரிசில்களை அதிகரித்து அதிகளவு மாணாக்கரை ஊக்குவிக்கவும் எமது சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய கட்டுரைப் போட்டி பின்வரும் மூன்று பிரிவுகளில் நாடாத்தப்படும்.
(அ)கீழ்ப்பிரிவு 7ஆம், 8ஆம், 9ஆம் கல்வியாண்டு மாணவர்கள்.
(ஆ)மத்தியபிரிவு 10ஆம்,11ஆம், கல்வியாண்டு மாணவர்கள்.
(இ)மேற்பிரிவு 12ஆம்,13ஆம் பாடாலையில் கல்வி பயிலும் மாணவர்களும், இவ்வாண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்விபயிலும் மாணவர்களும்,
அனைத்து மாணக்கரும் பரீட்சை மண்டபத்திறு;கு பிற்பகல் 2.45 மணிக்கு சமூகமளித்தல் வேண்டும்.
போட்டி இயற்திறன் முறையில் அமைவதால் கட்டுரைத் தலைப்புக்கள் போட்டியின் போது மண்டபத்திலே அறிவிக்கப்படும்.
சமூகப் பிரச்சனைகள், காரைநகர் அபிவிருத்தி, கற்றல் அல்லது அறிவின் முக்கியத்தும், சமயம், இலக்கியம், கலைகள், ஊர் அறிஞர்கள், காரை சமய மற்றும் சமூக நிறுவனங்கள் பற்றி ஏறத்தாள ஐந்து தலைப்புக்கள் வழங்கப்படும். மாணவர்கள் மேற்கூறிய தளங்களில் விருப்பமானவற்றைத் தேர்ந்தெடுத்து வாசித்தும் தகவல் திரட்டியும் தம்மைத் தயார்செய்து கொள்ளலாம்.
கட்டுரைகளில் தகவற் செறிவும், மொழித்திறனும், கற்பனையும், புதிய கருத்துக்களும், ஊர் மேம்பாடு பற்றிய ஆழங்காற்பட்ட அக்கறையும், துரநோக்கும் அவசியம்.
கட்டுரைகள் சாதாரண கையெழுத்தில் அண்ணளவாக
அ. பிரிவு இரண்டிலிருந்து மூன்று பக்கங்களிலும்,
ஆ. பிரிவு மூன்றிலிருந்து நான்கு பக்கங்களிலும் மற்றும்
இ. பிரிவு நான்கிலிருந்து ஆறு பக்கங்களில் அமையவேண்டும்.
கட்டுரைப் போட்டியிலன்று மாணவர்கள் தத்தம் பாடசாலைக்குரிய சீருடையில் சமுகம் தரவேண்டும். தேவையேற்படின் மாணாக்கர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
எமது சபையினால் உருவாக்கப்பட்டுள்ள கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழுவின் உறுபினர்களாகிய ஒய்வுநிலை அதிபர் பண்டிதர். மு.சு வேலாயுதபிள்ளை, ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷ்ணம் யோகலட்சுமி சோமசுந்தரம், வவுனியா, சித்தி விநாயகர் வித்தியாலய பிரதி அதிபர் திரு.அருணாசலம் வரதராஜன். ஆகியோர் பரீட்சையின் மேற்பார்வையாளார்களாக செயலாற்றுவார்கள்.
கட்டுரை எழுதுவதற்கான விடைத்தாள்கள், சுட்டெண்கள் அனைத்தும் மாணக்கருக்க மண்டபத்தில் வழங்கப்படும் என்பதை மாணவரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
மேற்படி கட்டுரை போட்டி சம்பந்தமாக மேலதிகதகவல் தேவைப்படின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
ஒய்வுநிலை அதிபர் பண்டிதர். மு.சு வேலாயுதபிள்ளை:- 0 77 667 94 04
ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷ்ணம் யோகலட்சுமி சோமசுந்தரம்:- 024 222 16 05
வவு/சி/வி/வித்தியாலய பிரதி அதிபர் திரு.அருணாசலம் வரதராஜன்.:- 077 614 35 26
கனடா தவிர்ந்த ஏனைய நாடுகளில் இப் போட்டி ஏககாலத்தில் இடம்பெறும்.
வெற்றியாளர்களுக்கான பரிசுகள் எதிர்வரும் மார்கழி மாதம் ஈழத்துச் சிதம்பர திருவெம்பாவைத் திருவிழாவின் – ஆதிரைநாள் அன்று மணிவாசகர் விழாவில் வழங்கப்படும். வெற்றி பெற்றவர்கள் பற்றிய தகவல்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவர்களுக்கு அறியத்தரப்படும். வெற்றியாளர்கள் நேரில் சமூகமளிக்க முடியாவிடின் தங்கள் சார்பாகப் பரிசு பெற்றுக்கொள்பவரின் பெயரை மேற்படி இணைய அஞ்சல் மூலம் எமக்கு அறியத்தரலாம்.
திறமைச்சித்தி மதிப்பளிப்பு -2014
2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தர (சாதாரண பரீட்சையில் O/L) இலங்கை பூராகவும் உள்ள காரைநகரைச் சேர்ந்த மாணவர்கள் பரீட்சையில் தமிழ், கணிதம் உட்பட 5A தரத்திலான சித்திகளுட்பட மொத்தமாக ஒன்பது பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். சு.கா.அ.சபையின் பரிசிலும் சிறப்பும் பெறவிரும்பும் மேற்படி தகமையுள்ள மாணாக்கர் தம் விபரங்களையும் பாடசாலை அதிபரினால் உறுதியளிக்கப்பட்ட பெறுபேற்று விபரங்களையும் எமது மின்அஞ்சலுக்கு karaithenral2014@gmail.com அனுப்பலாம்.
நன்றி
“நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்”
இங்ஙனம்,
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்,
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
22.09.2015
No Responses to “சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடத்தப்படும் கட்டுரைப் போட்டி- 2015 கலாநிதி. ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும்.”