ஈழத்து நாதஸ்வர வித்துவான் காரையம்பதி அமரர்.N.K. கணேசன் அவர்களின் புதல்வியும் யாழ்.பல்கலைக்கழக இசைத்துறையின் முதுநிலை விரிவுரையாளருமாகிய இராகசுரபி செல்வி.பரமேஸ்வரி கணேசன் M.A., M.Philஅவர்களின் கர்நாடக சங்கீதக் கச்சேரி அரங்கம் நிறைந்த இசை ரசிகர்கள் மத்தியில் வெற்றி நிகழ்வாக நடைபெற்றது.
கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி கனடா-கந்தசுவாமி கோயில் கலை அரங்கத்தில் நேற்று சனிக்கிழமை (27.06.2015) அன்று மாலை 6:00 மணிக்குத் தொடங்கி நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு ஈழத்து முன்னணிக் கலைஞர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், காரைநகர் மக்கள் மற்றும் கனடா வாழ் சங்கீத இசை ரசிகர்கள் என பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சமூகமளித்து கச்சேரியை ரசித்தனர்.
வெளியே பெரும் மழை பொழிந்து கொண்டிருந்தாலும் அதனையும் பொருட்படுததாது இந்த இசை வெள்ளத்தில் பெருந்திரளான ரசிகர் கூட்டம் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களைக் கீழே காணலாம். முழுமையான செய்தியுடன் படத்தொகுப்பும் மிக விரைவில் எடுத்து வரப்படும்.
No Responses to “அரங்கம் நிறைந்த சங்கீத ரசிகர்களுடன் வெற்றி நிகழ்வாக நடந்தேறிய செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி”