காரைநகர் இந்துக்கல்லூயில் மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டித் தரிப்பிடம் கல்லூரியின் பழைய மாணவர்; திரு.பரமநாதர் தவராசா அவர்களின் நிதியுதவியுடன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டித் தரிப்பிடம் இன்மையால் மாணவர்களின் நூற்றுக்கணக்கான துவிச்சக்கர வண்டிகள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் பழுதடைவதுடன் மாணவர்கள் வீடு திரும்பும்போது அவை காற்றுப்போய் விடுவதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இதனைக் கருத்திற்கொண்டு திரு.பரமநாதர் தவராசா அவர்கள் கடந்தமாதம் பிரித்தானியாவிலிருந்து கல்லூரிக்கு வருகை தந்தபோது இந்நிலையை கண்ணுற்று தானே துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் அமைத்துத் தருவதற்கு சம்மதம் தெரிவித்தார்.
இதன் விளைவாக இரண்டு லட்சரூபா செலவில் துவிச்சக்கர வண்டித்தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகள் பாதுகாக்கப்படுகின்றன. இதனை அமைப்பதற்கு உதவி வழங்கிய திரு.பரமநாதர் தவராசாவிற்கு கல்லூரி சமூகம் நன்றி தெரிவிக்கின்றது. திரு.தவராசா பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தரிப்பிடத்தின் படங்களை இங்கே காணலாம்.
No Responses to “திரு.பரமநாதர் தவராசா அவர்களின் நிதியுதவியுடன் கல்லூரியில் துவிச்சக்கர வண்டித்தரிப்பிடம் அமைப்பு”