காரை இந்துவில் பெண்கள் சாரணிய இயக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன் இதில் இணைந்து கொண்ட மாணவிகளிற்கான இரு நாள் பயிற்சிப்பட்டறை சென்ற ஏப்பிரல் 06ஆம் 07அம் திகதிகளில் நடாத்தப்பட்டிருந்தது. இப்பயிற்சிப் பட்டறையில் பெண்கள் சாரணிய இயக்கத்தின் வடமாகாண ஆணையாளா திருமதி ரூபா வசந்தகுமார் கலந்து கொண்டிருந்தார்.
பெண்கள் சாரணியத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற கல்லூரியின் ஆசிரியையான செல்வி சின்னையா சித்திரூபா ஆரம்பிக்கப்பட்டுள்ள சாரணிய இயக்கத்தின் பொறுப்பாசிரியையாக கடமையாற்ற உள்ளதுடன் இதில் பயிற்சிபெற்ற மற்றுமொரு ஆசிரியையான செல்வி.நடராசா அருள்வாணி அவருக்கு உதவியாக கடமையாற்ற உள்ளார். தற்போது சாரணிய இயக்க மாணவிகளிற்கான சீருடை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர்களிற்கான சின்னம் அணிவிக்கும் வைபவம் ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தெரிவித்தார்.
சாரணிய இயக்க மாணவி ஒருவர் சாரணிய சீருடை அணிந்து அதிபர் பொறுப்பாசிரியைகள் வடமாகாண ஆணையாளர் ஆகியோருடன் நின்று எடுத்த புகைப்படத்தினையும் மற்றும் சாரணிய இயக்கத்தில் இணைந்து கொண்ட மாணவிகளையும் பயிற்சிப்பட்டறையின்போது எடுக்கப்பட்ட படங்களையும் நீங்கள் இங்கே பார்க்கமுடியும்.
No Responses to “இந்துவில் பெண் சாரணிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு இதில் இணைந்து கொண்ட மாணவிகளிற்கான முதலாவது பயிற்சிப் பட்டறை நடாத்தப்பட்டுள்ளது”