கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் டிச.28.2014 அன்று சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
இப்பொதுக் கூட்டத்தில் செயலாளர் திரு.க.நிமலதாசன் செயற்பாட்டு அறிக்கையை சபையில் சமர்ப்பித்திருந்தார். அறிக்கை ஏகமனதாக சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பொதுச் சபையில் சமூகமளித்த அனைவருக்கும் அதிபர் அறிக்கை, செயற்பாட்டு அறிக்கை, பொருளாளர் அறிக்கை என்பவை அடங்கிய பிரதி நூல் வடிவில் வழங்கப்பட்டது.
மிகவும் விபரமாக வெளியிடப்பட்ட செயலாளர் அறிக்கையில் தாய்ச் சங்கத்தின் செயற்பாடுகள், கனடாக் கிளையின் நிதியுதவிகள், மருத்துவகலாநிpதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம் ஆரம்பிக்கப்பட்டமை, நலன்விரும்பிகளின் உதவிகள் புலம்பெயர் காரை அமைப்புகளின் ஆதரவு, மற்றும் பாடசாலை மேம்பாட்டுத் திட்ட முன்மொழிவுகள் பற்றியும் விபரிக்கப்பட்டுள்ளதுடன் ஆதரவு வழங்கிய அனைவருக்கும் செயலாளர் தமது நன்றியினையும் தெரிவித்துள்ளார்.
முழுமையான செயலாளர் அறிக்கையினை இங்கே அழுத்திப் பார்வையிடலாம்.
No Responses to “பழைய மாணவர் சங்கம், காரைநகர் செயலாளர் அறிக்கை (21.12.2013- 28.12.2014) திரு. க.நிமலதாசன்”