காரை மண்ணின் புதல்வியும் எமது கல்லூரியின் பழைய மாணவியும் முன்னாள் இந்து கலாசார அமைச்சர் அமரர் தியாகராசா மகேஸ்வரனின் அன்புத் துணைவியாரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் பெண்கள் விவகார பிரதி அமைச்சராக ஜனாதிபதி செயலகத்தில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டமையையிட்டு காரை மண்ணும் எம் கல்லூரியும் பெருமையடைகின்றது.
பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் மேன்மேலும் மக்களுக்கு மகத்தான சேவைபுரிவதற்கு இறைவன் அருள்புரிவாராக. பிரதி அமைச்சர் அவர்கள் உடல், உள ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் நற்கீர்த்தியுடன் வாழ எம் கல்லூரிச் சமூகம் சார்பாக உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் கல்லூரியன்னை பெருமகிழ்வடைகின்றாள் என அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான வாழத்துச் செய்தியையும் படங்களையும் கீழே காணலாம்.
No Responses to “பெண்கள் விவகார பிரதி அமைச்சராக பதவியேற்ற எமது கல்லூரி பழைய மாணவி திருமதி.விஜயகலா மகேஸ்வரன் அவர்களை எமது கல்லூரி சமூகம் பராட்டி வாழ்த்துகின்றது”