கடந்த ஆகஸ்ட் 2014 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பரீட்சை முடிவகள் அண்மையில் வெளிவந்திருந்தன.
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து வர்த்தகப் பிரிவு மாணவி செல்வி. பானுஜா கனகரத்தினம் 2A B என்ற பெறுபேற்றினைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 17 ஆம் இடத்தைப் பெற்று விளங்குகின்றார்.
கலைப்பிரிவில் செல்வி.சிவறஞ்சனா கிருஸ்ணமூர்த்தி 2A C என்ற சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுள்ளார்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:
வர்த்தகப் பிரிவு
1. பானுஜா கனகரத்தினம் 2A B (மாவட்டநிலை 17)
கலைப் பிரிவு
2. சிவநிறஞ்சனா கிருஸ்ணமூர்த்தி 2A C
3. றேனுகா கதிரமலை A 2B
4. ஜெயந்திமாலா நடராசா A 2S
5. ஆனந்தா காங்கேயன் 3 B
6. சகிதா முடிராசா 2B C
7. கம்சிகா அன்பழகன் 2B C
8. மதுசா இரத்தினவேல் B 2C
9. சுவிதா இராசேந்திரம் B 2C
10. மிதுனா குமாரசாமி B 2C
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு இவ்வாண்டு மொத்தமாக 47 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில், மேலே குறிப்பிட்ட 10 மாணவர்கள் உட்பட மொத்தம் 34 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகமை பெற்றுள்ளனர்.
அதாவது 72.3%சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் சதவீதம் கடந்த ஆண்டை விட 6.5% சதவீதத்தினால் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ள மாணவர்களையும் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதிபெற்ற அனைத்து மாணவர்களையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துவதுடன் இம்மாணவர்களைக் கற்பித்த ஆசிரியமணிகளையும் நன்றியுடன் பாராட்டுகின்றோம்.
No Responses to “க.பொ.த (உ-த) பரீட்சைப் பெறுபேறுகள் ஆகஸ்ட் 2014 வர்த்தகப் பிரிவில் அதிசிறந்த பெறுபேறு 2AB கலைப்பிரிவில் சிறந்த பெறுபேறு 2AC”