கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் மூன்றாம் தவணைக்கான வகுப்பு முதல்வர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களிற்கும் சென்ற தவணை தற்காலிகமாக தெரிவுசெய்யப்பட்ட 49 மாணவ முதல்வர்களுள் கல்லூரி நிர்வாகத்தினால் வரையறுக்கப்பட்டிருந்த தகுதிக்கான நிபந்தனைகளை திருப்திகரமாக நிறைவுசெய்த 40 மாணவ முதல்வர்களுக்கும் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தலைமையி;ல் செப்ரெம்பர் மாதம் 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாணவ முதல்வர்களிற்கான சின்னத்தினை தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.செல்வராசா அவர்களும் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உதவிப் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்களும் கல்லூரியின் முதுநிலைப் பகுதித் தலைவர் திரு.தெட்சணாமூர்த்தி லிங்கேஸ்வரன் அவர்களும் இடைநிலைப் பகுதித் தலைவர் திரு.யோ.கேதீஸ்வரன் அவர்களும்; அணிவித்தனர். முதுநிலை மாணவ தலைவர்கள் இருவருக்குமான சின்னத்தினை அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அணிவித்திருந்தார்.
வகுப்பு முதல்வர்களிற்கான சின்னத்தினை அந்தந்த வகுப்பின் பொறுப்பாசிரியர்கள் அணிவித்தனர்.
இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படங்களை கீழே காணலாம்.
No Responses to “மாணவ முதல்வர்களிற்கும் மூன்றாம் தவணைக்கான வகுப்பு முதல்வர்களிற்கும் சின்னம் அணிவிக்கப்பட்டு அவர்களது பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன”