கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் மேம்பாடு நோக்கி சென்ற 23-08-2014 சனிக்கிழமை கனடா கந்தசுவாமி கோவில் கலை அரங்கில் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டிருந்த கலைமாமணி திருமதி பூஷணி கல்யாணராமனின் இன்னிசைக் கச்சேரி அனைத்து வகையிலும் வெற்றிகரமானதாக அமைந்ததையிட்டு மிக்க மகிழ்வடைகின்றோம்.
இந்த வெற்றியை அடைவதற்கு காரணமாக விளங்கிய அனைத்து உள்ளங்களிற்கும் நெஞ்சார்ந்த நன்றியினை கூறிக்கொள்வதில் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை பெருமிதமடைகின்றது.
இன்னிசைக் கச்சேரியை சிறப்பாக வழங்கிய கலைமாமணி திருமதி பூஷணி கல்யாணராமன் மற்றும் அவரது அணிசேர் கலைஞர்களான வயலின் இசைவேந்தன் முல்லைவாசல் ஸ்ரீ பு.சந்திரமௌலி மிருதங்க வித்துவான் ஸ்ரீ கிரிதரன் சச்சிதானந்தன் ஆகியோருக்கும் தம்புரா வாசித்த செல்வி பிரியங்கா கிருஷ்ணதாசன் அவர்களிற்கும்
நிகழ்விற்கு அனுசரணை வழங்கி ஊக்கிவித்த குழந்தை வைத்திய நிபுணர் மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் தொழிலதிபர் திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம் வீடு விற்பனை முகவர் திரு.ராஜ் நடராசா ஆகியோருக்கும்
இன்னிசைக் கச்சேரியினை மங்கள விளக்கேற்றிவைத்து ஆரம்பித்து வைத்த பழைய மாணவர் சங்க கனடா கிளையின் போசகரும் கனடா சைவ சிந்தாந்த மன்றத்தின் தலைவருமாகிய சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவரது பாரியார் திருமதி வடிவழகாம்பாள் விசுவலிங்கம் கல்லூரியின் மூத்த பழைய மாணவரும் முன்னாள் கணக்காளரும் முன்னாள் ஆசிரியருமாகிய திரு.முருகேசம்பிள்ளை பாலசுப்பிரமணியம் சங்கத்தின் முன்னாள் தலைவரும் தற்போதய நிர்வாக உறுப்பினரும் முன்னாள் ஆசிரியருமாகிய திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்களிற்கும்
கடவுள் வணக்கம் தமிழ்மொழி வாழ்த்து கனடா பண் ஆகியவற்றை இசைத்திருந்த சங்கீதபூஷணம் பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் மாணவிகளான செல்வி டக்ஷனா ஞானகாந்தன் செல்வி கோசலா ஞானகாந்தன் ஆகியோருக்கும்
இன்னிசைக் கச்சேரியினை ரசிக்க வேண்டும் என்பதுடன் மட்டுமல்லாது எமது ஊரின் பிரபல கல்லூரி சார்ந்த நிகழ்வொன்றில் கலந்து கொள்கின்றோம் என்ற மேலான உணர்வோடு திரளாக சமூகமளித்திருந்த சங்க அங்கத்தவர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் ஆகியோருக்கும்
நிகழ்வின் விளம்பரத்தினை வெகு சிறப்பாக ஒலிபரப்பி ஊக்கிவித்த கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (CTBC) அதிபர் திரு.இளையபாரதி அவர்களிற்கும்
சமூக அறிவித்தல் பகுதியில் விளம்பரத்தினை ஒலிபரப்பி உதவிய கனடிய பல்கலாசார வானொலி (CMR 101.3 FM), அனைத்துலகத் தமிழ் வானொலி (GTR)ஆகியனவற்றிற்கும்
வழமைபோல விளம்பரத்தினை குறைந்த கட்டணத்தில் பிரசுரித்து ஆதரவளித்திருந்த ஈழநாடு கனடா உதயன் ஆகிய பத்திரிகைகளிற்கும்
karaihinducanada.com ஊடாக விளம்பரம் செய்திருந்த அதன் நிர்வாகி திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன்
karainagar.com ஊடாக விளம்பரம் செய்து ஆதரவளித்த கனடா-காரை கலாச்சார மன்ற நிர்வாகம்
karainews.com ஊடாக விளம்பரம் செய்து ஆதரவளித்த திரு.தீசன் திரவியநாதன்
karainagar.co ஊடாக விளம்பரம் செய்து ஆதரவளித்த திரு.பொன்னம்பலம் குழந்தைவேலு ஆகியோருக்கும்
விளம்பரப் பிரசுரங்களை வடிவமைத்து உதவிய திரு.மா.கனகசபாபதி அவர்களிற்கும்
மண்டப ஒழங்குகளை சிறப்பாக செய்துதவிய கனடா கந்தசுவாமி கோவில் நிர்வாகத்திற்கும்
ஓலி அமைப்பினை தெளிவாக அமைத்திருந்த SORN AUDIO VISUAL யது அவர்களிற்கும்
நிகழ்வுகளை நிழற் பதிவாக்கிய திரு.சோதிநாதன் திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் ஆகியோருக்கும்
தொண்டர்களாக பணியாற்றி உதவிய செல்வி மதுரா சோதிநாதன் செல்வி மயூரா சோதிநாதன் ஆகியோருக்கும்
நிகழ்வுகளை வெகு சிறப்பாக தொகுத்து வழங்கி நிகழ்விற்கு சிறப்புச் சேர்த்த திரு.பா.ஞானபண்டிதன் அவர்களிற்கும்
நிகழ்வினை வாழ்த்தி ஆதரவு வழங்கி ஊக்கிவித்த கல்லூரியின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களிற்கும்
கலைமாமணி திருமதி பூஷணி கல்யாணராமனுடன் தொடர்பினை ஏற்படுத்தித்தந்ததன்மூலம் நிகழ்விற்கு ஆரம்பதளம் இட்டவரான லண்டனில் வதியும் சமய சமூக சேவையாளரான திரு.ஜ.தி.சம்பந்தன் அவர்களிற்கும் குறுகிய காலம் இருந்ததனால் நாம் சிறிது தயங்கிய போது துணிவுடனும் நம்பிக்கையுடனும் நிகழ்வினை முன்னெடுக்க ஊக்கிவித்த சங்கத்தின் கணக்காய்வாளர் திரு.கந்தப்பு அம்பலவாணர் அவர்களிற்கும்
பல்லாற்றாலும் ஒத்துழைத்த நிர்வாக உறுப்பினர்கள் பொதுச் சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கும் குறிப்பாக திரு.ஆறுமுகம் சோதிநாதன் திரு.கந்தையா வேலாயுதபிள்ளை ஆகியோருக்கும்
ஏல்லாவற்றிற்கும் மேலாக பாடசாலையின் மேம்பாடு என்கின்ற நிகழ்வின் நோக்கத்தினை புரிந்துகொண்டு நுழைவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு பேராதரவு வழங்கி ஊக்கிவித்த எமது சங்க அங்கத்தவர்கள் பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றது.
நிர்வாகம்
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்
பழைய மாணவர் சங்கம் – கனடா
No Responses to “கலைமாமணி பூஷணி கல்யாணராமனின் இன்னிசைக் கச்சேரி வெற்றி நிகழ்வாக அமைந்து அதன் நோக்கத்தை அடைவதற்கு ஆதரவளித்த அனைத்து உள்ளங்களிற்கும் நெஞ்சார்ந்த நன்றி!”