கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் கற்றல் கற்பித்தல் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிற்கான தேவைகள் மாற்றமடைந்து வரும் தற்போதய கல்வி முறைகளின் கீழ் அதிகரித்துக் காணப்படுகின்றன.
எனவே இச்செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான வசதி வாய்ப்புக்கள் கிடைக்க ஏற்பாடு செய்வதன் மூலம் காரைநகரின் முதன்மைப் பாடசாலையும் தீவக வலயத்தில் முதல்நிலைப் பாடசாலையுமாக விளங்கும் இப்பாடசாலையினை நகர்ப்புற பாடசாலைகளிற்கு இணையானதாக மாற்றியமைக்க முடியும்.
அப்படிச்செய்வதன் மூலம் வசதியுள்ளவர்கள் நகர்ப்புறப் பாடசாலைகளை நாடுவதை தவிர்த்து பொருளாதார வசதியற்றவர்கள் தரமான கல்விச் சேவையினை பெறக்கூடிய நிலையினை ஏற்படுத்த முடியும்.
இக்கல்லூரியில் பல தேவைகள் பாடசாலைச் சமூகத்தினால் இனம் காணப்பட்டு நிறைவு செய்யபடவேண்டியிருப்பதாக தெரிவித்து உதவிகளிற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் அண்மையில் தொடங்கப்பட்ட பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை பாடசாலையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளிற்கு உதவுவதில் கனடா வாழ் பழைய மாணவர்களினதும் நலன் விரும்பிகளினதும்; பேராதரவுடன் செயலாற்றி வருவதையும,; கடந்த இரண்டு ஆண்டுகளில் பாடசாலையின் மேம்பாட்டிற்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கி வந்ததையும் யாவரும் அறிந்திருப்பீர்கள்.
மேலும் பல முக்கியமான திட்டங்களிற்கு உதவுவதற்கு அடிப்படையாக சங்கத்தின் நிதி வளத்தினை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தினை அனைவரும் உணர்ந்திருப்பீர்கள் என நாம் நம்புகின்றோம்.
சங்கத்தின் நிதி வளத்தினைப் பெருக்கி பாடசாலையின் துரித வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்கின்ற நோக்கோடு கர்நாடக இசை உலகில் பிரபல முன்னணிக் கலைஞராக விளங்குகின்ற கலைமாமணி திருமதி பூஷணி கல்யாணராமனின் இன்னிசைக் கச்சேரியினை எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 23ஆம்திகதி மாலை 6.00 மணிக்கு 1380 Birchmount Rd(Birchmount&Lawrence) என்கின்ற புதிய அமைவிடத்திலுள்ள கனடா கந்தசுவாமி கோயில் கலை அரங்கில் நடத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு பழைய மாணவர்கள் காரைநகர் மக்கள் நலன் விரும்பிகள் இசை ரசிகர்கள் என அனைவரும் திரண்டு வந்து குறிப்பிட்ட அன்பளிப்பு தொகையினை வழங்கி ஆதரவளிப்பதன் ஊடாக எம்மால் பாடசாலை அபிவிருத்திக்கு உதவும் பணிகளிற்கு வலுச்சேர்ப்பதுடன் அரிய இனிய கச்சேரியினையும் கண்டு களிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.
நிர்வாகம்
பழைய மாணவர் சங்கம் – கனடா
No Responses to “கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் மேம்பாடு நோக்கி நடத்தப்படும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்குமாறு பழைய மாணவர் சங்கம் விடுக்கும் அன்பான வேண்டுகோள்”