மங்கா ஒளிவீசும் மடத்துக்கரை அம்பாளின் பாதக்கமலங்களைப் பணிந்து, காரையம்பதியின் வரலாற்றுப் புகழ்பெற்ற கல்லூரிக்கு வித்திட்ட பேராசான் அமரர் முத்து சயம்பு அவர்களிற்கு சிரந்தாழ்த்தி, 126 ஆண்டுகள் மண்ணின் மைந்தர்களுக்கு ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய சீரிய நல்லறிவையும், காலத்தின் தேவையறிந்து நவீன தொழினுட்பங்களுடன் கூடிய கல்வியையும் வழங்கி, சமூகப் பொருத்தப்பாடுடைய நற்பிரiஐகளை உருவாக்கி பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நிற்கும் எம் கல்லூரி அன்னைக்கு எல்லோர் சார்பிலும் முதல் வணக்கத்தைத் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றேன்.
கல்லூரி 126 ஆவது ஆண்டு அகவையை பூர்த்தி செய்து பூரித்து நிற்கும் இந்நன்னாளிலே 2013ம் ஆண்டிற்கான நிறுவுநர் தினத்தையும், பரிசில் தினத்தையும் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்வடைகின்றேன்.
இந்நன்னாளிலே மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி கௌரவிக்க, பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் வடமாகாண கல்விப்பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் உயர்திரு ச. சத்தியசீலன் அவர்களே! சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்துள்ள தீவக வலயக் கல்;விப்பணிப்பாளர் உயர்திரு. தி. ஜோன்குயின்ரஸ் அவர்களே! சங்கானை பிரதேசசெயலர் உயர்திரு அ. சோதிநாதன் அவர்களே! கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் ஓய்வு நிலை வலயக்கல்விப்பணிப்பாளர் உயர்திரு த. மேகநாதன்! அவர்களே,
காரைநகர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் உயர்திரு பு. ஸ்ரீவிக்னேஸ்வரன் அவர்களே!
தீவக வலயக் கல்விப் பணிமனையைச் சார்ந்த கல்வி அதிகாரிகளே!
ஊட்டப்;பாடசாலைகளின் அதிபர்களே! ஆசிரியர்களே!
அயற் பாடசாலைகளின் அதிபர்களே! ஆசிரியர்களே!
பாடசாலை அபிருத்திச்சங்க உறுப்பினர்களே!
பாடசாலை அபிருத்திக்;குழு உறுப்பினர்களே!
எமது பிரதேசத்திலுள்ள நிறுவனங்களின் தலைவர்களே!
பழையமாணவர் சங்க உறுப்பினர்களே!
பெற்றோர்களே, நலன்விரும்பிகளே!
எனது அன்பான ஆசிரியர்களே!
கல்விசாரா ஊழியர்களே!
அன்புநிறை மாணவச்செல்வங்களே!,
உங்கள் அனைவருக்கும் அன்பான இனிய வணக்கங்களைக் கூறிவரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
இன்றைய பரிசளிப்பு நன்னாள் எமது கல்லூரி பண்பாட்டினதும் அறிவுத்திறனினதும் நிலைக்களனாக விளங்கும் உன்னத நாள். இன்றைய பரிசளிப்பு விழாவில் எமது மாணவச்செல்வங்களுக்கு பரிசில்களை வழங்கிப் பாராட்ட இங்கு வருகை தந்திருக்கும்; தீவக மண்ணின் மைந்தனும் வடமாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளருமான உயர்திரு சிவலிங்கம் சத்தியசீலன் அவர்கள் முதன்மை விருந்தினராக வருகை தந்தமையால் எம் கல்லூரி அன்னை பெருமை அடைகின்றாள். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும், யாழ் பல்கலைக்கழகத்தில் பிராந்திய திட்டமிடலில் முதுகலைமாணிப்பட்டத்தையும் காமராஐர் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைமாணிப்பட்டத்தையும் பெற்று கல்வித் துறையிலும் தாங்கள் கொண்ட தொழிற்றுறையிலும் பாண்டித்தியத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமையால் அதி உயர் உன்னத பதவியை அலங்கரித்துக் கொண்டுள்ளீர்கள். 1985ஆம் ஆண்டு ஆசிரியத் தொழிலில் இணைந்து கொண்ட தாங்கள் 10 வருடங்களாக மாணவர்களுக்கு சிறந்த கல்விப் பணியை வழங்கியதோடு நின்றுவிடாது தங்களின் அறிவுத் திறமையால் 1995ஆம் ஆண்டில் இலங்கை நிர்வாக சேவைக்குத் தெரிவாகி,; ஆறு வருடங்கள் உதவிப் பிரதேச செயலாளராகவும், தொடர்ந்து 10 வருடங்கள் வவுனியா, கரவெட்டி பிரதேசங்களில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளீர்கள். தங்களின் முகாமைத்துவத் திறமையினால் 2011 ஆம் ஆண்டு பிரதேச செயலகங்களுக்கிடையில் நடைபெற்ற முகாமைத்துவப் போட்டியில் தங்கள் ஆளுகைக்குட்பட்டிருந்த கரவெட்டிப் பிரதேச செயலகம் அகில இலங்கை ரீதியில் 2ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. தங்களின் சேவைத் திறமையால் 2012ம் ஆண்டு முதல் வடமாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளராக பதவி உயர்த்தப்பட்டீர்கள். அவ்வகையில் வடமாகாணத்தில் தங்களுடைய சிறந்த சேவையினால் கல்விப்புலம் சார்ந்த அனைவரும் தங்களை நன்கு அறிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தங்களின் கல்விச்சேவை வடமாகாண மக்களின் உயர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக அமைய மனமார வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
தங்களின் இவ் அளப்பரிய சேவைக்கு உறுதுணையாகத் திகழும் தங்கள் பாரியார் யாஃ வடமராட்சி மத்திய கல்லூரியின் கலைப்பட்டதாரி ஆசிரியரான திருமதி இராNஐஸ்வரி சத்தியசீலன் அவர்களுடனும்;, ஹாட்லிக் கல்லூரியின் க.பொ.த உயர்தர கணிதப்பிரிவில் கற்கும் ச.சுலக்ஷன், ச. கஜானன் ஆகிய தங்கள் இரு பேராற்றல் மிக்க புதல்வர்களுடனும் பார்போற்ற சிறப்புடன் வாழ இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்துகின்றோம்.
தீவகக் கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளரும், தீவக மண்ணின் மைந்தனுமான உயர்திரு. திருஞானம் ஜோன்; குயின்ரஸ் அவர்களே! இவ்விழாவிற்கு நீங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம். யாழ்ப்பாண பல்கலைகழகக் கலைப்பட்டதாரியான தாங்கள் கல்வியியல், பண்பாட்டியல், தமிழ் போன்ற துறைகளில் முதுகலைமாணிப் பட்டங்களைப் பெற்று சிறந்த கல்விமானாக தங்களை உயர்த்திக் கொண்டீர்கள். தங்களின் திறமையினால் ஆசிரியராக, விரிவுரையாளராக கடமையாற்றினீர்கள். கல்வி நிர்வாக சேவைக்கு பதவி உயர்த்தப்பட்ட தாங்கள் பின் தீவகக் கல்வி வலயத்தில் மாணவர் அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் பிரிவிற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றினீர்கள். தங்களின் சேவைத்திறமையால் தீவகக் கல்வி வலயத்தின் வலயகல்விப்பணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டு தீவகச் சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையை வழங்கி வரும் தாங்கள் இன்றைய பரிசில் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிப்பதில் எம்கல்லூரிச் சமூகம் பெருமகிழ்வடைகின்றது. தங்களின் இக் கல்விப்பணி எமது தீவக வலயத்தின் உயர்ச்சிக்கு உறுதுணையாக அமைவதில்;; பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
அன்புக்கும் பெருமதிப்பிற்கும் உரிய எமது காரை மண்ணின் மைந்தனும் சங்கானைப் பிரதேச செயலாளருமான உயர்திரு அம்பலவாணர் சோதிநாதன் அவர்களே! நீங்கள் இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிப்பதில் பெரு மகிழ்வடைகின்றோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், பொது நிர்வாகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்ற தாங்கள் யாழ் மாநகரசபையில் காசாளராக 3 வருடங்கள் பணியாற்றி பின் ஆசிரியராக பணியாற்றினீர்கள். தங்களின் அறிவுத் திறமையினால் 2003ஆம் ஆண்டு; இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவாகினீர்கள். அதன் காரணமாக உதவிப் பிரதேச செயலாளர் பதவியை ஏற்று ஆறு வருடங்கள் முல்லைத்தீவு மற்றும் உடுவில் பிரதேச செயலகங்களில் மிகச் சிறப்பாக மக்கள் தேவைகளை உணர்ந்து செயலாற்றினீர்கள். தங்களின் நிர்வாகத்திறமையினால் பிரதேச செயலாளராக பதவியுயர்வு பெற்று, சங்கானை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வருகின்றீர்கள். இவ்வருடம் காரைநகர் பிரதேச செயலகத்திலும் பிரதேச செயலராக 3 மாதங்கள் பதிற் கடமையாற்றினீர்கள். அக்காலத்தில் காரை மண்ணின் வளர்ச்சிக்கும் தாங்கள் உறுதுணையாக இருந்தமை எம்மால் மறக்க முடியாது. அவ்வகையில் தங்களை சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவிப்பதில் பெரு மகிழ்வடைகின்றோம்.
காரை மண்ணின் மைந்தனும் எம் கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியரும். ஓய்வு நிலை வலயக் கல்விப் பணிப்பாளருமான உயர்திரு தம்பிராசா மேகநாதன் அவர்களே! தங்களை எம் கல்லூரி அன்னை தனது 126 அவது ஆண்டு அகவையில் அழைத்து கௌரவிப்பதில் பெருமிதம் அடைகின்றாள். 1972 ஆம் ஆண்டில் விஞ்ஞான ஆசிரியராகப்; பணியில் இணைந்து கொண்ட தாங்கள் வாழைச் சேனை முஸ்லிம் ம.வி., அராலி இந்துக் கல்லூரி, யாழ்;ரன் கல்லூரி, ஆ.தியாகராசா ம.ம.வி., ஆகிய பாடசாலைகளில் 20 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றி தங்களின் திறமையால் பிரதி அதிபர், அதிபர் பதவிகளையும்; அலங்கரித்த தாங்கள்; வவுனியா சைவப்பிரகாச ம வி. இல் கடமையாற்றிய காலத்தில் தங்களின் கல்விப் புலமை, நிர்வாகத் திறமை காரணமாக 1999 ஆம் ஆண்டில் இலங்கை கல்வி நிர்வாக சேவை – III இற்குத் தெரிவு செய்யப்பட்டதுடன் வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் கல்வி நிர்வாகப் பிரதிக்கல்விப் பணிப்பாளராக சிறப்பாகப் பணியாற்றினீர்கள். தங்களின் அர்ப்பணம் மிக்க சேவையினால் 2006 ஆம் ஆண்டு வலயக் கல்விப்பணிப்பாளராக அதே வலயத்திலேயே பதவி உயர்வு பெற்றுக் கடமையாற்றினீர்கள். பின்னர் 2009 ஆம் ஆண்டில் இ.க.நி.சே.II இற்கு தரம் உயர்த்தப்பட்டதுடன், துணுக்காய் கல்வி வலயத்தில் வலயக் கல்வி பணிப்பாளராகக் கடமையாற்றி 2011 ஆம் ஆண்டில் கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்றீர்கள். இருப்பினும் தங்கள் ஓய்வுக் காலத்திலும் கல்விப்பணியாற்ற விரும்பி எமது கல்லூரிக்கும் இடையிடையே வருகைதந்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கிச் சென்றீர்கள். இத்தகைசால் தங்களை கல்லூரித் தாய் கௌரவிப்பதில் பெருமையடைகின்றாள். இன்றைய நாளில் கல்லூரி நிறுவுநரின் நினைவுப் பேருரையையும் தாங்கள் வழங்க இருப்பது எங்களிற்கு மட்டற்ற மகிழ்வைத் தருகின்றது.
பாடசாலை விபரம்
1AB தரத்தை சேர்ந்த தரம் 6-13 வரையான வகுப்புகளைக் கொண்ட எமது பாடசாலை 1000 பாடசாலைத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு காரைநகர்ப் பிரதேசத்தின் வளம் மிக்க ஓர் பாடசாலையாகவும் தீவகக் கல்வி வலயத்தின் முதன்மைப் பாடசாலையாகவும் திகழ்கின்றது.
மாணவர் விபரம்
தரம் 6-13 வகுப்பு வரை கனிஸ்ட இடைநிலைபிரிவில் 379 மாணவர்களும், சிரேஸ்ட இடைநிலைப் பிரிவில் 223 மாணவர்களுமாக மொத்தம் 602 மாணவர்கள் கற்றனர்.
ஆசிரியர் விபரம்
2013ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் இறுதி வரை அதிபர் உட்பட 32 ஆசிரியர்கள் இக்கல்லூரியில் மிகச் சிறப்பாகக் கடமையாற்றினார்கள்;;. இவர்களில், 01 முதுதத்துவமாணி ஆசிரியரும், 02 கல்வியியல் முதுமாணி ஆசிரியர்களும், 02 முதுகலைமாணி ஆசிரியர்களும், 19 பட்டதாரி ஆசிரியர்களும், 7 விசேட பயிற்சி ஆசிரியர்களும் உள்ளனர்
2013 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் அதிபர் உட்பட 13 ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர் அவர்களின் விபரம்
1. திரு பொ. சிவானந்தராசா – அதிபர்
2. திருமதி யா. சண்முகானந்தன் – இரசாயனவியல்
3. திரு ப. செந்தில்குமார் – விஞ்ஞானம்
4. திருமதி ப. குகானந் – மனைப்பொருளியல்
5. திருமதி ஞா. சிவராசா – வர்த்தகம்
6. திருமதி யோ. லோகநாதன் – கணிதம்
7. திருமதி ற. தனேஸ்குமார் – பொருளியல்
8. திரு க. மணிவண்ணன் – ஆங்கிலம்
9. செல்வி த. யசோதா – தமிழ்
10. திருமதி பா. மஞ்சுளா – பொருளியல்
11. செல்வி ப. தயாளினி – நடனம்
12. திருமதி ல. நிரூஷன் – சங்கீதம்
13. திரு ச. சசிக்குமார் – பௌதிகவியல்
இவர்களில் இரு வருடங்களிற்கு மேலாக அதிபராகக் கடமையாற்றிய திரு பொ. சிவானந்தராசா அவர்கள் கோட்டக் கல்விப் பணிப்பாளராகப் பதவியுயர்வு பெற்றுச் சென்றுள்ளார். இவர் அதிபராகப் பணியாற்றிய காலத்தில் பாடசாலையில் இலத்திரனியல் நூலகம் அமைத்தல், நடராசா மண்டபப் புனரமைப்பு, மைதானம் புனரமைப்பு போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொண்டு பாடசாலையின் பௌதிக வளவிருத்திக்கு அளப்பரிய பங்காற்றியிருந்தார்;. அவ்வகையில் அவர்தம் சேவையை இச்சமயததில் பாராட்டி வாழ்த்துகின்றேன்.
இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள ஆசிரியர்கள்; பாடசாலையில் பணியாற்றிய காலத்தில் அர்ப்பணிப்புடன் மிகச் சிறப்பாக பணியாற்றி மாணவர்களின் பாடவிதான, இணைப்பாடவிதான விருத்திக்கு உறுதுணை புரிந்தீர்கள். நீங்கள் ஆற்றிய சேவைக்கு கல்லூரி சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு சென்ற இடங்களில் சிறப்பாகப் பணியாற்றி பல் புகழ்களையும் பெற வாழ்த்துகின்றேன்.
மேலும் 2013 ஆம் ஆண்டில் எமது பாடசாலைக்கு 06 ஆசிரியர்கள் புதிதாக இணைந்து கொண்டனர். இவர்களில்
1. திருமதி வா. தவபாலன் – அதிபர்
2. திருமதி அ. முகுந்தன் – ஆங்கிலம்
3. திருமதி அ. இராஐசிவம் – புவியியல்
4. திரு இ. இராஐகோபால் – தமிழ்
5. திருமதி ப. முகுந்தன் – சங்கீதம்
6. திரு மு. nஐயானந்தன் – பௌதீகவியல்
புதிதாக எமது கல்லூரிக் குடும்பத்தில் இணைந்து கொண்ட இவ்வாசிரியர்களை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்வடைகின்றேன்.
2013 ஆம் ஆண்டில் எமது கல்லூரி அதிபர் திருமதி வா.தவபாலன் அவர்கள் முதுதத்துவமாணிப்பட்டத்தையும், ஆசிரியர் திருமதி ச. கேசவன் அவர்கள் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பட்டத்தையும் பெற்று தமது வாண்மைத் தகைமையை வளர்த்துக்; கொண்டனர் இவர்களையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டி வாழ்த்துகின்றேன்.
கல்விசாரா ஊழியர்கள்
திரு த. பரமசாமி ஆய்வுகூட உதவியாளராகவும், திரு. ஆ. தியாகலிங்கம் பாடசாலை இரவு நேரக்காவலாளியாகவும், திரு. மு. சிவனேஸ்வரன் சுகாதாரத் தொழிலாளியாகவும் கடமை புரிகின்றனர். எமது பாடசாலைக்கு அலுவலகப் பணியாளர் இல்லாத நிலைமையிலும் திரு த. பரமசாமி, திரு. மு. சிவனேஸ்வரன் ஆகியோர் தமது கடமைகளுடன் அலுவலகப் பணியாளர் கடமைகளையும் இணைத்து நிறைவு செய்தனர். அவ்வகையில் இவர்களின் கடமையுணர்வையும் அர்ப்பணம் மிக்க சேவையையும் இச்சமயத்தில் பாராட்டுகின்றேன்.
இவர்களுடன் எமது பாடசாலையின் பழைய மாணவர்களான செல்வி சி. அமுதா செல்வி த நிவேதா செல்வி யோ. கஜந்தினி ஆகியோரும் உதவியாளராக கடமையாற்றி வருகின்றாரகள்;. இவர்களுடைய தன்னலமற்ற சேவையையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.
பௌதீக வளம்
எமது பாடசாலையில் 12 மூடப்பட்ட வகுப்பறைகளும், 8 திறந்த வகுப்பறைகளுமாக 20 வகுப்பறைகள் உள்ளன. அத்துடன் பின்வரும் வகையிலான கற்றல் வெளிகள் (Learning spaces) காணப்படுகின்றன.
பௌதீகவியல், இரசாயனவியல், உயிரியல் ஆய்வுகூடங்கள்
சங்கீதம், நடனம், நாடகம், சித்திர பாடங்களுக்கான அறைகள்
செயற்பாட்டறை
நூலகம்
இலத்திரனியல் நூலகம்
கணனிக் கற்கை நிலையம்
இவற்றுடன் தற்காலிகமாக ஒழுங்கமைக்கப்பட்ட
பல்லூடக அறை
பொது விஞ்ஞான ஆய்வுகூடம்
புவியியல் அறை
என்பனவும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இவற்றுக்கும் மேலாக ஆயிரம் பாடசாலைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மகிந்தோதய தொழில்னுட்ப ஆய்வு கூடம் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டதும் பின்வரும் கற்றல் இடங்கள் மாணவர் பாவனைக்கு வழங்கப்படும்.
தகவல்தொடர்பாடல் தொழில்னுட்ப அறை
கணித அறை
மொழியியல் கூடம்
நனச தொலைக்கல்விக் கூடம் என்பன அமைக்கப்பட்டுள்ளன.
நூலகத்தில் 2013ஆம் ஆண்டின் இறுதியில் மாணவர் பயன்பாட்டிற்காக 5809 நூல்கள் காணப்பட்டன. 2013 ஆம் ஆண்டில் 190 புத்தகங்கள் புதிதாக நூலகத்திற்கு பல்வேறு வகையில் கிடைக்கப்பெற்றுள்ளது
கணனிக் கற்கை நிலையத்தில் 14 கணனிகளில் 07 கணனிகள் மாத்திரமே மாணவர் கற்றலிற்கு ஏற்ற வகையில் இயங்கு நிலையில் உள்ளன.
பல்லூடக அறையில் 2 கணனிகள், பல்லூடக எறியி, மேந்தலை எறியி, வழுக்கி எறியி, தொலைக்காட்சிப் பெட்டி போன்ற உபகரணங்கள் காணப்படுகின்றன. இவ் உபகரணங்கள் முழுமையாக மாணவர் கற்றல் செயற்பாடுகளுக்கு சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றது.
பாடவிதான செயற்பாடுகள்
2013இல் கல்வித் திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் மாணவர்களுக்கான விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2013ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 61.4% மாணவர்கள் க.பொ.த உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.
இதில் நாடகமும் அரங்கியலும்; பாடத்தில்; 100% சித்தியையும், தமிழ், புவியியல், சைவசமயம், சங்கீதம், தகவல்தொழில்னுட்பம் ஆகிய பாடங்களில் 80% இற்கும் மேற்பட்ட சித்தி வீதத்தினையும் பெற்றுள்ளார்கள். 2
013ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 65.8% மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறத் தகுதி பெற்றுள்ளார்கள். இதில் வணிகம், சங்கீதம், நாடகமும் அரங்கியலும், சித்திரம், மனைப்பொருளியல்; ஆகிய பாடங்களில் 100% சித்திகளை பெற்றுள்ளனர். இவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களை இச் சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.
குறிப்பாக நாடகமும் அரங்கியலும் பாடத்தில் 70% மாணவர்கள் ‘A’ தரச் சித்தியைப் பெற்றுள்ளனர். இவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர் திருமதி வி. றமணன் அவர்களை இச்சந்தர்ப்பத்தில் சிறப்பாகப் பாராட்டுகின்றேன்.
பொதுப்பரீட்சை பெறுபேறு
6A,B,C,S எனும் சிறப்பு பெறுபேற்றை க.பொ.த சாதாரண தரத்தில் நவரட்ணம் தீபிகா எனும் மாணவி பெற்றுக் கொண்டார். க.பொ.த.உயர்தரத்தில்; செல்வன் ஆனந்தா காங்கேயன், செல்வி மிதுனா குமாரசாமி ஆகிய இருவரும் கலைப்;பிரிவில் A,B,C எனும் பெறுபேற்றையும் பெற்றுள்ளனர். இவர்களையும் இச்சந்தர்ப்பத்திலே பாராட்டுகின்றேன்.
இணைப்பாடவிதானச் செயற்பாடுகள்
1. விளையாட்டுத்துறை
எமது கல்லூரியின் இணைப்பாடச் செயற்பாடுகளில் விளையாட்டுத் துறை காத்திரமான சாதனைகளைப் புரிந்து வருகின்றது. உதைபந்தாட்டம், பூப்பந்து, கரப்பந்து, வலைப்பந்து, கபடி, சதுரங்கம் போன்ற பெருவிளையாட்டுக்களிலும் மெய்வல்லுநர் நிகழ்வுகளிலும் கோட்ட, வலய, மாவட்ட, மாகாண நிலைகளை தனதாக்கிக் கொள்ளுமளவிற்கு உன்னத வளர்ச்சி பெற்றுள்ளது. சென்ற ஆண்டு 15,17,19 வயது ஆண், பெண் உதைபந்தாட்ட அணிகளும், 15,19 வயது ஆண், பெண கரப்பந்தாட்ட அணிகளும், 19 வயது பெண் வலைப்பந்தாட்ட, பூப்பந்தாட்ட அணிகளும், 19 வயது ஆண், பெண் கபடி அணிகளும் வலயமட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட மட்டத்திற்கு தெரிவானது. ஆண், பெண் சதுரங்க அணிகளும் வலயமட்டத்தில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட மட்டத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
மெய்வல்லுநர் போட்டிகளிலும் வலயமட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தி இருந்தனர். மேற்படி அணிகளை வழிநடத்தும் விளையாட்டுத்துறைச் செயலர் திருமதி சா. சிவராஜ் மற்றும் பொறுப்பாசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பாடசாலை மட்ட வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வும் பழைய மாணவர் திரு கோ. ஸ்ரீவரதன் (முகாமையாளர், அலையன்ஸ்) அவர்களின் முழுமையான அனுசரணையுடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
2. மன்றங்கள்
மாணவர்களின் பல்வேறு திறன்களையும், ஆளுமையையும் விருத்தி செய்வதற்கு மன்றங்கள் உறுதுணையாய் உள்ளன. மன்றச் செயற்பாடுகள் மூலம் பெருந்தொகையான மாணவர்கள்; நிகழ்வுகளில் பங்குபற்றக் கூடியவாறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களின் திறன்கள், ஆற்றல்கள் வெளிக் கொணரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பின்வரும் மன்றங்கள் கல்லூரியில் செயற்பட்டு வந்துள்ளன.
இந்துமாமன்றம்
திருமதி சங்கீதா பிரதீபன் பொறுப்பாசிரியரின் நெறிப்படுத்தலில்; வெள்ளிக்கிழமை பிரார்த்தனை மற்றும் குருபூசை தினங்கள், வாணிவிழா ஆகியவற்;;றை சிறப்பாகக் கொண்டாடியதுடன் நாளாந்தம் காலை நற்சிந்தனை, குறளமுதம் போன்றவற்றையும் செயற்படுத்தி வருகின்றது. அத்துடன் சைவபரிபாலன சபைப் பரீட்சை, மணிவாசகர் சபைப் பரீட்சைகளுக்கும் மாணவர்களை நெறிப்படுத்துகின்றனர்.
உயர்தர மாணவர் மன்றம்
திரு வே. சிவநேசன் பொறுப்பாசிரியரின் வழிகாட்டலில் சிறப்பாக செயற்பட்டதுடன் உயர்;;;;;;தர மாணவர் ஒன்று கூடல் மற்றும் மதியபோசன நிகழ்வையும் ஆசிரியர் தின நிகழ்வையும்; சிறப்பாக ஒழுங்குபடுத்தி; நிகழ்த்தினர்.
சுகாதார மன்றம்
சிரமதானம், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளிலும், மாணவர் சுய சுகாதாரம் பேணுதலிலும் ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.
அவற்றைவிட கவின்கலை மன்றம், கணித விஞ்ஞான மன்றம், சமூக விஞ்ஞான மன்றம், ஆங்கில மன்றம் ஆகியன கனிஷ்ட பிரிவு சிரேஷ்ட பிரிவு என தனித்தனியாக செயற்படுவதுடன் மாதம் ஒரு தடவை என்ற வகையில் சிரேஷ்ட பிரிவு வியாழக்கிழமைகளிலும், கனிஷ்ட பிரிவு வெள்ளிக்கிழமைகளிலும் ஒன்றுகூடி அவ்வப் பொறுப்பாசிரியர்களின் நெறிப்படுத்தல்களுக்கமைய மாணவர் ஆளுமை விருத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
அத்துடன் பாடரீதியாக தமிழ்த்தினப் போட்டி, கணித விநாடிவினாப்போட்டி, விஞ்ஞான விநாடிவினாப்போட்டி, சமூக விஞ்ஞானப் போட்டி, ஆங்கில தினப் போட்டிகளில் மாணவர்களை வலய, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பங்குபற்றச் செய்து சாதனைகளைப் புரிந்துள்ளனர்.
குறிப்பாக கணித ஒலிம்பியாட்போட்டியில் தரம் 10 செல்வி சி. விதுசா தேசிய மட்டத்தில் பங்குபற்றிச் சாதனை படைத்துள்ளார். அம் மாணவியையும் அவரை நெறிப்படுத்திய ஆசிரியர் திரு நா. கேதாரநாதன் அவர்களையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.
வணிக மன்றம்
வணிக மன்றம் வணிகப் போட்டிகளில் மாணவர்களைப் பங்குபற்றச் செய்வதுடன், பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம், மாணவர்களுக்கான வங்கிச் சேவை போன்றவற்றையும் செயற்படுத்தி வருகின்றது.
3. விசேட குழுக்கள்
i. மதர்ஸ்ரீலங்கா அணி
இவர்கள் 2013 ஆம் ஆண்டில் ‘பாடசாலைச் சுற்றுப்புறத்தைக் கவின்நிலைப் படுத்தல்’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு பாடசாலைப் பூங்கா அமைத்தல், மூலிகைத் தோட்டம் அமைத்தல், கழிவு முகாமைத்துவம் போன்றவற்றை க.பொ.த உயர்தர மாணவர்களின் மாணவர் செயற்றிட்டக் குழுக்களின் உதவியுடன் செயற்படுத்தி வருகின்றனர். இச் செயற்றிட்டத்தினைத் திரு ந. விஜயகுமார், திருமதி ச. கேசவன், திரு இ. ஜீவராஜ், திரு தெ. லிங்கேஸ்வரன், திரு நா. கேதாரநாதன் ஆசிரியர்கள் இணைந்து வழிநடத்தினர். இச் செயற்றிட்டத்தில் இணைந்து கொண்ட ஆசிரியர்களையும் மாணவர்களையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.
ii. சுற்றாடல் முன்னோடிக்குழு
2013 ஆம் ஆண்டின் மே மாதம் 25 மாணவர்களுடன் உருவாக்கப்பட்ட இக்குழு பொறுப்பாசிரியர்களான திருமதி சி. வாகீசன், திருமதி அ. இராசசிவம் ஆகியோரின் சிறப்பான வழிப்படுத்தலினால் 6 மாத காலத்துள் மஞ்சள் வர்ணப் பதக்கங்களை சுற்றாடல் முன்னோடி மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். இவர்கள்; உலக சுற்றாடல் தினத்தையும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
iii. பெண்கள் சாரணியம்
2013 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 27 மாணவர்களுடன் உருவாக்கப்பட்ட இக்குழு பொறுப்பாசிரியர்களான செல்வி சி. சின்னையா, திருமதி. அ. முகுந்தன்; ஆகியோரின் சிறப்பான வழிப்படுத்தலினால் செயற்பட்டு வருகின்றனர்.
iv. பாண்ட் அணி
இதுவரை காலமும் ஆண்களும் பெண்களும் இணைந்த ஒரு அணியாக இருந்த மேலைத்தேய பாண்ட் அணி ஆண்களுக்கும் பெண்களுக்குமாக தனித்தனி அணிகளாக உருவாக்கப்பட்டு மாணவர் பங்குபற்றல் வீதம் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எமது கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கீழைத்தேய பாண்ட் அணியும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வணிகளை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்களை இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.
அத்துடன் மேலைத்தேய பாண்ட் அணியினருக்கான சீருடைகளை அன்பளிப்பாக வழங்கிய திரு ந. யோகநாதன் (யோகா ரான்ஸ்போட்) அவர்களுக்கும், திரு நா. கேதாரநாதன் (ஆசிரியர்) அவர்களுக்கும், காலணிகளை வழங்கிய திரு இ. nஐயராசா (சுப்பர்சூ) அவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எம்மிடம் கீழைத்தேய பாண்ட் உபகரணங்கள் இல்லாத போதும் நாம் கேட்கும் போதெல்லாம் மனமுவந்து பாண்ட் உபகரணங்களையும், ஆடைகளையும் வழங்கும் சங்கானைப் பிரதேச செயலருக்கும், கலாசார உத்தியோகத்தருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
2013 ஆம் கல்வியாண்டில் பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட விசேடநிகழ்வுகள்
1. 125ஆம் ஆண்டுவிழா ஆரம்ப நிகழ்வாக நாட்காட்டி வெளியீடு
2. புனர்நிர்மாணம் செய்யப்பட்ட நடராசா மண்டபத் திறப்பு விழா
3. மாணவ முதல்வர், வகுப்பு முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
4. வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு
5. சிற்றுண்டிச்சாலைத் திறப்பு விழாவும், சாதனையாளர் கௌரவிப்பும்
6. பெண்கள் சாரணியம் ஆரம்ப வைபவம்
7. உலக சுற்றாடல் தின நிகழ்வு
8. கல்லூரியின் 125ஆவது ஆண்டுவிழா
9. சரஸ்வதி ஆலயத்திற்கான விக்கிரக சாந்தி நிகழ்வு
10. உலக சமாதானதினமும், சிறுவர் தின நிகழ்வும்
11. உலக ஆசிரியர் தினம்
12. வாணிவிழா
13. இலவச பாடநூல், சீருடை, தேர்ச்சியறிக்கை, வழங்கலும் மாணவர் கௌரவிப்பும்
14. ஒளிவிழா
15. 2014 ஆம் கல்வியாண்டு மாணவர் அனுமதிக்கான நேர்முகத்தேர்வு
கல்லூரியின் 125 ஆம் ஆண்டு நிறைவு விழா
2013 ஆம் ஆண்டில் கல்லூரியின் 125ஆம் ஆண்டு நிறைவு விழா மிகச் சிறப்பாக பழைய மாணவர்களாலும் கல்லூரிச் சமூகத்தினராலும் 3 இடங்களில் கொண்டாடப்பட்டது.
முதலில் லண்டன் காரை நலன்புரிச்சங்கம் உலகெங்கும் வாழும் காரை இந்துவின் புதல்வர்களை ஒன்று திரட்டி வெகுவிமரிசையாக லண்டனில் கொண்டாடியதுடன், அந்நிகழ்வில் நிறுவுநரின் உறவுகளையும், கல்லூரியை வளர்த்தெடுத்த நல்லாசான்களையும் கௌரவித்திருந்தனர். அத்துடன் நின்றுவிடாது கல்லூரியின் இணைப்பாடவிதான வளர்ச்சிக்காக ரூபா ஒரு மில்லியனை நிரந்தர வைப்பிலிட்டு சான்றிதழை வழங்கியிருந்தனர். அவ்வகையில் எம் கல்லூரிக்கு விழா எடுத்த லண்டன் காரை நலன்புரிச்சங்கத் தலைவர் திரு ப. தவராசா அவர்களுக்கும், அவர்தம் நிர்வாக உறுப்பினர்களுக்கும் லண்டன் வாழ் பழைய மாணவர்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இரண்டாவதாக எம் கல்லூரியில் நிறுவுநர் தின நிகழ்வு, பரிசில்தின நிகழ்வு, கலைவிழா என்ற வகையில் இரு தினங்கள் 3 அமர்வுகளாகக் கொண்டாடப்பட்டது. நிறுவுநர் தின நிகழ்வில் நிறுவுநரான அமரர் முத்து சயம்பு அவர்களின் புனரமைக்கபட்ட திருவுருவச் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டதுடன், சிறப்பு மலராக ‘சயம்பு’ மலர் வெளியிடப்பட்டது. இந் நிகழ்வில் நிறுவுநர் நினைவுப் பேருரையை பழைய மாணவர் சங்கப் போசகரான திரு S.K. சதாசிவம் அவர்கள் வழங்கியிருந்தார். அந்நிகழ்வில் நிறுவுனரின் நெருங்கிய உறவினர்களான பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், பாடசாலையின் பழைய மாணவர்கள் பலரும், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வியதிகாரிகள் போன்றோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் வைத்திய கலாநிதி வி. விஐயரட்ணம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் விழாவிற்கான முழுமையான அனுசரணையையும் வழங்கியிருந்தார். இரண்டாம் அமர்வான பரிசில் தின நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு வ. செல்வராசா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இந்நிகழ்விற்கான முழுமையான அனுசரணையை பழைய மாணவர் சங்கக் கனடாக்கிளையினர் வழங்கியிருந்தனர்.
3ஆம் அமர்வான கலைவிழாவில் யாழ் பல்கலைக் கழக உயர்பட்டப்படிப்புகள் பீடப் பீடாதிபதி பேராசிரியர் ளு. சத்தியசீலன் அவர்களும் கலாநிதி (திருமதி) அ. சத்தியசீலன் கல்வியியற்துறைத் தலைவர் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவ்விழாவிற்கான முழுமையான அனுசரணையை சுவிஸ் காரை அபிவிருத்திச் சங்கத்தினர் வழங்கியிருந்தனர்.
அவ்வகையில் கல்லூரிக்கு விழா எடுத்த கல்லூரிச் சமூகத்தவர்களுக்கும், அனுசரணை வழங்கியவர்களுக்கும், விழாவில் கலந்து சிறப்பித்தவர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இறுதியாக பழைய மாணவர் சங்கக் கனடாக்கிளை கனடாவில் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்; வாழும் காரை இந்துவின் புதல்வர்களை ஒன்று திரட்டி வெகுவிமரிசையாக 125ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடியிருந்தனர்;. அவர்களும் அந்நிகழ்வில் நிறுவுநரின் உறவுகளையும், கல்லூரியை வளர்த்தெடுத்த நல்லாசான்களையும் கௌரவித்து தம்மை வளர்த்த கல்லூரி அன்னைக்கு விழா எடுத்து தமது நன்றியுணர்வை வெளிப்படுத்தியிருந்தனர். அவ்வகையில் எம் கல்லூரிக்கு விழா எடுத்த பழைய மாணவர் சங்கக் கனடாக்கிளைத் தலைவர் திரு த. அம்பிகைபாகன், செயலாளர் திரு. கனக சிவகுமாரன் அவர்களுக்கும், மற்றும் அவர்தம் நிர்வாக உறுப்பினர்களுக்கும் கனடா வாழ் பழைய மாணவர்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
2013 இல் மேற் கொள்ளப்பட்ட பாடசாலை பௌதிக வள அபிவிருத்திப் பணிகள்
1. புனரமைப்புச் செய்யப்பட்ட நடராஜா மண்டபம் திறந்து வைக்கப்பட்டு பாவனைக்கு விடப்பட்டது.
2. பாவனைக்குதவாத கட்டடம் அகற்றப்பட்டு அவ்விடத்தில் மகிந்தோதய ஆய்வு கூடம் அமைக்கப்பட்டது.
3. 100க்கும் மேற்பட்ட தளபாடங்கள் திருத்தம் செய்யப்பட்டது.
4. பாடசாலையின் தெற்கு வளாக கிழக்கு எல்லை வேலி வயர் மெஸ் ஆல் அடைக்கப்பட்டது.
5. மண்டபத்துள் புறா நுழையாது தடுப்பு வலை இடப்பட்டது.
6. மாணவர்களுக்கான சைக்கிள் தரிப்பிடம் அமைக்கப்பட்டது.
7. சிற்றுண்டிச்சாலை அமைக்கப்பட்டது.
8. அதிபர் அலுவலகம் கவின்நிலைப்படுத்தப்பட்டது.
9. தரம் 7, 8 வகுப்பறைகள் வர்ணம் தீட்டப்பட்டு கண்ணாடி ஓடுகள் இடப்பட்டு கவின்நிலைப் படுத்தப்பட்டது.
10. குழாய்நீர் விநியோகம் புதிதாக 8 பைப்புகள் பொருத்தி நீடிக்கப்பட்டது.
11. பாடசாலைப் பூந்தோட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
12. நிறுவுநர் திருவுருவச் சிலை புனரமைக்கப்பட்டது.
13. நூலகத்திற்கு 25000.00 ரூபா செலவில் புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட்டது.
2013ஆம் கல்வியாண்டில் மேற்குறிப்பிட்ட சிறுசிறு வேலைத் திட்டங்கள் பல லட்சம் ரூபா செலவில் எமது பழைய மாணவர்களினதும், கல்வித் திணைக்களத்தினதும் பூரண ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டது. இவ் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு நிதியுதவி, பொருளுதவி, மற்றும் சேவைகளை வழங்கிய பெற்றோர் பழைய மாணவர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகளிற்கும் இச்சந்தர்ப்பத்தில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
புலமைப்பரிசில்
தரம் 5 ற்கான புலமைப்பரிசில் நிதியத்தினால் தரம் 6-13 வரையான மாணவர்களில் 18 பேர் புலமைப்பரிசில் நிதியைப் பெறுகின்றனர்.
ஜனாதிபதி புலமைப்பிரிசில் நிதியை 5 மாணவர்கள் பெறுகின்றனர்
தியாகராஜா புலமைப்பரிசில் நிதியை தரம் 10-13 வரையான 30 மாணவர்கள் பெறுகின்றனர்
அவுஸ்திரேலியா புலமைப்பரிசில் நிதியை தரம் 13 ஐச் சேர்ந்த 13 மாணவர்கள் பெறுகின்றனர்
சிப்தொற புலமைப்பரிசில் நிதியை 17 மாணவர்கள் பெறுகின்றனர்.
மேற்குறிப்பிட்ட வகையிலான புலமைப் பரிசில் நிதிகளை எமது பொருளாதார வளம் குன்றிய 67 மாணவர்களுக்கு வழங்கி கற்றலில் ஊக்கத்தை அளிக்கும் சகல ஊக்குவிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்;கின்றேன்.
பழையமாணவர் சங்கம்
எமது பாடசாலைப் பழைய மாணவர் சங்கம் கல்லூரியின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் ஏனைய செயற்பாடுகளுக்கும் தமது பங்களிப்பை சிறப்பாக ஆற்றி வருகின்றது. 2013ஆம் கல்வியாண்டில் செயற்பட்ட நிர்வாகக் குழுவினர் கடந்த வருடம் பாடசாலை அபிவிருத்திப் பணிகளிலும், பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு நிழ்வுகளிலும் காத்திரமான பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தனர்.
அத்துடன் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை பாடசாலைப் பௌதிகவள விருத்தி, பாடவிதான அபிவிருத்தி மற்றும் இணைப்பாடவிதான அபிவிருத்திக்கு வேண்டிய உதவிகளை அவ்வப்போது வழங்கி வருகின்றனர். அத்துடன் நின்றுவிடாது பாடசாலையின் சாதனைகளை karaihinducanada.com எனும் இணையத்தளத்தினுர்டாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
பழைய மாணவர் சங்கக் கொழும்புக்கிளையும் அவ்வப்போது வேண்டிய உதவிகளை சிறப்பாக வழங்கி வருகின்றது. அவ்வகையில் பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும், கிளை நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நிறைவேற்றப்பட வேண்டிய பௌதிகவள அபிவிருத்தித் திட்டங்கள்
1. பாடசாலையின் தெற்கு வளாகத்தில் பெண் பிள்ளைகளுக்கான மலசலகூடம் அமைத்தல்.
2. வகுப்பறைகளினுள் புறா நுழையாத வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளல்.
3. பாடசாலைக் கட்டடத்தின் உள்ளும், புறமும் வர்ணம் தீட்டி அழகுபடுத்தல்
4. பாடசாலைச் சுற்றுப்புறம் எல்லைப்படுத்தி பாதுகாப்பு மதில்ஃவேலிகளை அமைத்தல்
5. விளையாட்டு மைதானப் புனரமைப்பும், பார்வையாளர் அரங்கம் (பமிலியன); அமைத்தலும்
6. உள்ளக விளையாட்டரங்கம் அமைத்தல்
7. பாடசாலைக்கான பெயர் வளைவு அமைத்தல்
8. பாடசாலையின் வடக்கு, தெற்கு வளாகங்களைக் கவின்நிலைப்படுத்தும் வகையில் அழகிய பூந்தோட்டம் அமைத்தல்.
9. சயம்பு மண்டபம் திருத்தம் செய்தல்.
10. கீழைத் தேச, மேலைத்தேச பாண்ட் இசைக் கருவிகள் கொள்வனவு
11. நூலகத்தின் கூரைகள் திருத்தம் செய்தல்.
12. நூலகத்தின் வாசகர் பகுதி மற்றும் கணனிக் கற்கை நிலையத்தின் மாணவர் பயன்பாட்டுப்பகுதி விஸ்தரிக்கப்படல்
13. இரசாயனவியல் ஆய்வுகூடத்தின் மின்னிணைப்பை சீர்செய்தல்.
14. வகுப்பறைக் கவின்நிலை இன்றைய கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளுக்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தல்.
15. பாடசாலையின் வீதியின் இருபுறமும் உள்ள வடக்கு, தெற்கு வளாகங்களை இணைக்கும் வேலைத்திட்டத்தை மேற்கொள்ளல்.
16. வகுப்பறைகளின் இரும்பு சுருக்கு புயவநள திருத்தம் செய்தல்.
17. தளபாடத்திருத்தம்
18. தளபாடங்களுக்கு வர்ணம் தீட்டல்
நன்றியுரை
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணை புரிந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது அழைப்பை ஏற்று இந்நாளில் வருகை தந்து விழாவைச் சிறப்பித்துக் கொண்டிருக்கும் பிரதம விருந்தினர் வடமாகாண கல்விப்பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் உயர்திரு ச. சத்தியசீலன் அவர்களே, சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து விழாவைச் சிறப்பித்த தீவக வலயக் கல்;விப்பணிப்பாளர் உயர்திரு. தி. ஜோன்குயின்ரஸ் அவர்களே, சங்கானை பிரதேசசெயலர் உயர்திரு அ. சோதிநாதன் அவர்களே, கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்த ஓய்வு நிலை வலயக்; கல்;விப்பணிப்பாளர் உயர்திரு த. மேகநாதன் அவர்களே, உங்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகனைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மற்றும் எமது அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்துள்ள கல்வியதிகாரிகள் அயற்பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் எமது பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.
மற்றும் பரிசளிப்பு விழாவிற்கு நிதியுதவி வழங்கிய கனடா பழையமாணவர் சங்கத்திற்கும், நினைவுப்பரிசில்களை வழங்கிய திருமதி மனோன்மணி தம்பிராஜா (ஓய்வு பெற்ற ஆசிரியர்), அவர்களுக்கும், திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் அவர்களுக்கும், திரு. கனக சிவகுமாரன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
நன்றி
அதிபர்
திருமதி வாசுகி தவபாலன்
No Responses to “2013ஆம் ஆண்டிற்கான அதிபரின் பரிசில் தின அறிக்கை”