கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் யூலை மாதம் 4ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகிவருகின்றது. பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை ஒரு இலட்சம் ரூபாவினை வழங்கி இப்பரிசளிப்பு விழாவிற்கான அநுசரணையினை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கு மேலதிகமாக சங்கத்தின் அங்கத்தவர்கள் சிலர் தமது அன்புக்குரியவர்களின் நினைவாக விசேட ஊக்குவிப்புப் பரிசில்களை வழங்கி உதவ முன்வந்துள்ளனர். அந்தவகையில காரைநகர் வலந்தலை முதலிகேணியடியைச் சேர்ந்தவரும் லண்டனில் வசித்து வந்து அமரத்துவமடைந்தவருமாகிய திருமதி சுப்பிரமணியம் சரஸ்வதி நினைவாக க.பொ.த. (சாதாரணம்) தர பரீட்சையில் சங்கீத பாடத்தில் A தர சித்தி பெற்ற ஜவருக்கு கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவின்போது சிறப்பு பரிசிலை பகிர்ந்து வழங்க பத்தாயிரம் ரூபாவினை அன்னாரது புதல்வரும் மருமகளுமாகிய திரு சுப்பிரமணியம் சச்சிதானந்தன் திருமதி சச்சிதானந்தன் சுந்தரேஸ்வரி தம்பதியினர் உதவியுள்ளனர்.
எல்லாத்துறைகளிலும் முன்னணியில் திகழும் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலத்தில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற க.பொ.த (சா-த) பரீட்சையில் வாய்ப்பாட்டு இசைப் பாடத்தில் 91% சதவீதத்தினர் சித்தியடைந்தமையுடன் ஐந்து மாணவர்கள் A தர சித்தி பெற்று சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த ஐந்து மாணவர்களுக்குமே மேற்படி அமரர் சரஸ்வதி சுப்பிரமணியம் நினைவுப் பரிசில் அவரது மகனாகிய சச்சிதானந்தன் குடும்பத்தினரால் வழங்கப்படுகின்றது.
திரு திருமதி சச்சிதானந்தன் தம்பதியினர் தமது இரு புதல்வர்களையும் சங்கீதத் துறையில் ஈடுபடுத்தி வருவதுடன் இவர்களது மூத்த புதல்வாரன செல்வன் அமுதீசர் ச்ச்சிதானந்தன் வாய்ப் பாட்டு சங்கீத்த்தில் வளர்ந்துவரும் கலைஞர்களுள் பிரபல்யம் மிக்கவராக விளங்குபவர் என்பதுடன் திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் பழயை மாணவர் சங்க கனடா கிளையின் நிர்வாக சபை அங்கத்தவர்களுள் ஒருவராக பணியாற்றி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சென்ற ஆண்டு பரிசளிப்பு விழாவின்போதும் இவர்கள்hல் இதே உதவி வழங்கப்பட்டிருந்தது.
No Responses to “வருடாந்த பரிசளிப்பு விழாவில் அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி நினைவுப் பரிசில் வழங்க பத்தாயிரம் ரூபா உதவி”