பாடசாலைகளில் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வருகின்ற நிகழ்வுகளில் முதன்மை வாய்ந்த நிகழ்வாக பரிசளிப்பு விழா அமைந்து விளங்குகின்றது.
கடந்த கல்வி ஆண்டில் கல்வி உள்ளிட்ட பல துறைகளிலும் சாதனைகளை ஈட்டிய மாணவர்களை கௌரவித்து பரிசளிப்பதன் மூலம் அவர்கள் மேன்மேலும் சாதனைகள் படைத்து கல்வியில் உயர்ந்து மிளிரவேண்டும் என்பதுடன் அவர்களை ஏனையோரும் பின்பற்ற ஊக்குவிக்கும் வகையிலும் இப்பரிசளிப்பு விழா பாடசாலைச் சமூகத்தினால் ஆண்டுதோறும் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா எதிர்வரும் யூலைமாத முற்பகுதியில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருப்பதாக கல்லூரி அதிபர் தெரிவித்ததுடன் இவ் விழாவிற்கான அனுசரணையினை வழங்க முன்வந்த பழைய மாணவர் சங்க கனடா கிளையைப் பாராட்டி நன்றி கூறினார்.
இதன்பொருட்டு ஒரு இலட்சம் ரூபாவினை கனடா கிளை உதவவுள்ளதுடன் சென்ற ஆண்டும் இதேயளவு தொகையினை உதவி ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No Responses to “கல்லூரியின் பரிசளிப்பு விழாவிற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிள ஒரு இலட்சம் ரூபா நிதி உதவி”